Monday, April 23, 2012

தெரு பிச்சைக்காரர்

காற்றில் கடும் இசை;

அழகழகாய் ஆடைகள்
ஆயிரமாயிரம்; 

அச்சம் நாணமேதுமில்லாது
ஆடவர் பெண்டிர்;

காசு ஒன்றே குறியாய்க்
கல் நெஞ்சத்தோடு கனவான்கள்;

ஆடம்பரமும்,
அத்தனையையும் தெரிய
செல்வச் செழிப்பில்
சீமாட்டிகள்;

உயிரற்ற பொம்மைகளோடு மட்டும் 
விளையாடும் 
உயிருள்ள குழந்தைகள்;

விரைந்து செல்ல 
வாகனங்கள்;

இனி அடுத்தத் திருமணம்
இங்கே எப்பொழுதோ
எனத் தெரியாத
ஏக்கத்தில்,
வீசப்பட்ட இலையை
விரைவாய் மேயும்
தெரு பிச்சைக்காரர்;

No comments:

Post a Comment