Monday, April 16, 2012

ஏனாதிநாத நாயனார் - 3

                                    ஏனாதிநாத நாயனார்

வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;

தன் நெற்றியில் இதுவரை
திருநீறு அணியாதத்
தீயவன் ஆதிநாதன்,
திருநீறு அணிந்த எவரையும்
தீங்கு செய்யார் ஏனாதிநாதர் என்றறிந்திருந்ததால்,
தன் நெற்றியில்
திருநீறு அணிந்துகொண்டான்;
கேடயத்தால் திருநீறு வெளியே தெரியாது மறைத்துக் கொண்டான்;

போர் புரியக் குறிக்கப்பட்ட இடம் நோக்கிச் சென்றான்;
ஏனாதிநாதர் தன்
எதிரியை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்;

போர் துவங்கியது;
வீரம் கை ஓங்கியது;
தன்னால் இதற்குமேல்
தாங்க முடியாதென்ற நிலை வந்ததும்,
தன் கேடயத்தை விலக்கி
திருநீறு அணிந்தத் தன் நெற்றியைக்
காண்பித்தான்;


       கைவா ளுடன் பலகை நீக்கக் கருதியது
       செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனுந்தீமை
       எய்தாமை வேண்டும் இவர்க்கென் றிரும்பலகை
       நெய்வா ளுடன்அடர்த்து நேர்வார்போல் நின்றார்


ஏனாதிநாதர் அதிர்ந்தார்;
போர் புரியாது சிலையாய் நின்றார்;
கைவாள் கீழே வீசினால்
நிராயுதபாணியைக் கொன்ற பலி
சிவவேடம் தரித்தவனுக்கு வருமென்பதால்
போர் புரிவது போல் நடித்தார்;

இதுவே தக்கத் தருணம்
என்றெண்ணி ஆதிசூரன்
ஏனாதி நாதரை வாளால் குத்திக் கொன்றான்;
எதிரியை வென்றேன்
என வீறு கொண்டு சொன்னான்;

தீயவன் எனினும்
திருநீறு அணிந்தவனுக்கு
தீங்கு ஏதும் நேராது
தயை புரிந்த ஏனாதி நாதருக்கு
எம்பெருமான் சிவன் பார்வதியோடு
தரிசனம் தந்து
தன் வசம் கொண்டார்;


                                                                        ஓம் நமசிவாய

No comments:

Post a Comment