Wednesday, April 4, 2012

சிவபுராணம் - 10

                                    பசுபதாஸ்திரம்


மகாபாரதக் காலம்;
துரியோதனன் பாண்டவர்களை
கானகத்திற்குத் துரத்தியக் காலம்;
பாண்டவர்கள் காட்டில்
வாழ்ந்து வந்தக் காலம்;

அப்பொழுது ஒருநாள்,
வியாசமுனி வந்தார்;
பாண்டவர்களைச் சந்தித்தார்;
சிவனைச் சிந்தனையில் வைத்துத்
தவம் செய்ய
அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார்;
அதற்கென ஒரு
அரிய மந்திரத்தை
அவனுக்கு ஓதினார்;
பாகிரதி நதி கரையிலுள்ள
இந்திரகிலா மலைக்குச் சென்று
இத்தவம் இயற்ற
இயம்பினார்;

அர்ச்சுனனும் தவம் செய்யச்
அம்மலை அடைந்தான்;
களிமண்ணால் சிவலிங்கம்
செய்தான்;
சிவனை எண்ணித் தவம்
செய்தான்;
வியாசர் விவரித்த மந்திரத்தை
இடைவிடாது சொல்லி வந்தான்;
அர்ச்சுனன் தவம் செய்த இடத்திற்கு
பன்றி ஒன்று வந்தது;
தன் தவத்தை கலைக்க வந்த
பன்றியோ ?
தன் எதிரியால்
ஏவப்பட்ட பன்றியோ ?
ஏதாவது அசுரன் பன்றி வடிவில்
வந்திருக்கிறானோ ?
என்று பலவாறு எண்ணினான்;
பன்றியை தன்னிடம் விட்டுத்
துரத்த முயற்சித்தான்;
முடியாது போகவே,
ஒரு அம்பு எடுத்து விடுத்தான்;
பன்றியை ஒரே அடியில்
கொன்றுவிடத் துடித்தான்;


தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment