Thursday, April 12, 2012

ஏனாதிநாத நாயனார் - 1

                                    ஏனாதிநாத நாயனார்

சோழ நாட்டில்,
சோலைகள் நிறைந்த
மலர்கள் மலர்ந்து மனம் வீச,
வண்டுகள் ரீங்காரமிட,
வயல்கள் நிறைந்த,
குளுமையான ஒரு ஊர்
எயினனூர்.

உயரமாய்
வளர்ந்து நிற்கும் கரும்புகளின்
உயரத்தை விட
உயர்ந்து வளரும்
நெற்பயிர்கள்
நிறைந்த அவ்வூரில்
செல்வச் சிறப்பொடு
அடியார்களுக்குத் தொண்டு செய்து,
வாழ்ந்து வந்தார்
ஏனாதி நாதர்.


       தொன்மைத் திருநீற்றுத்
         தொண்டின் வழிபாட்டின்
       நன்மைக்கண் நின்ற
         நலமென்றும் குன்றாதார்
       மன்னர்க்கு வென்றி
         வடிவாள் படைபயிற்றும்
       தன்மைத் தொழில்
         விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.


நெற்றியில் திருநீறு பூசி,
நெஞ்சில் சிவபூசை செய்து,
வாயில் சிவநாமம் சொல்லி, மன்னனின்
படை வீரர்களுக்கு
வாள்போர் பயிற்சி
தந்து வந்தார்;

வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;


                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment