Tuesday, January 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 13

என் இனிய சிநேகிதா,
எதுவும் இன்னும் மறக்கவில்லையடா.
கோவிலில் எனக்காகப் பிரசாதம் வாங்கி வைத்திருந்ததும்
நீ அன்பாய்த் தந்ததாலேயே நான் அதிகமாய்த் தின்றதும்
தேவாரமோ திருவாசகமோ பிரபந்தமோ எப்போது கேட்டாலும் பொருள் விளங்க நீ சொல்லித்தந்ததும்
உன்னோடு அன்னம் உண்டதும்
உன் கை பிடித்தபடி ஊஞ்சல் ஆடியதும் ....
எதுவும் இன்னும் மறக்கவில்லையடா. என்னவோ ஏதோ போதாத நேரமென்றுதான் சொல்லவேணும்
நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்ல
கோபங்கொண்டு
இருவரும் இருவேறுதிசையில் செல்ல
சரி, எல்லாம் மறப்போம்
வேறுபாடுகளைக் களைவோம்
வெவ்வேறிடத்தில் வசித்திடினும் மனதால் இணைவோம்
நாளும் உன் நினைவினில் வாடும் இவ்வது
நலம் கேட்கிறேன் நல்வார்த்தை சொல்லிடு
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?

***

மழை
இந்த மழை தான்
இதே மழை தான்
இந்த மழை நாளில் தான்...ஒருநாள்

அவளும் நானும்
எப்பொழுதும் போல்
ஊர் சுற்ற ஒன்றாய்க் கிளம்பினோம்
தனிமையில் ஓரிடம் கிட்டாதுப் புலம்பினோம்
எங்கள் பின்னே கருமேகக்கூட்டம்
பெருமழை பெய்ய வாய்ப்பு அதிகம்
சாலையின் ஓரத்தில்
சகுடியில் வேகும் சோளம் வாங்கினோம்
ஆளில்லா இடத்தினில்
அவசரமேயில்லாது ஊட்டி விளையாடினோம்
பரந்து விரிந்த கடலைக் கண்டோம்
பிள்ளையாய் மாறிக் குதித்து மகிழ்ந்தோம்
இன்னும் என்ன செய்யலாம் என்று எண்ணுகையில்
முன்னம் சொன்னது போல் மழை பொழியவே
அவள் திகைக்க நான் சிரிக்க
என்ன செய்வோம் என்றவள் வினவ
கண்ணால் நான் ஜாடை காட்ட
இரண்டு கைகளையும் X போல் வைத்துக் கொண்டு அவள் முறைக்க
*மழைவருது மழைவருது குடை கொண்டுவா, மானே உன் மாராப்பிலே* என்று நான் பாட

இந்த மழை தான்
இந்த மழையில் தான்
ஒருநாள்.


***

பார்க்கையில் பார்க்கிறாய்
சிரிக்கையில் சிரிக்கிறாய்
நலம் கேட்கிறாய்
நீ நலமா என்றால் கவிதையில் பதில் தருகிறாய்
என்ன அணிந்திருந்தாலும் அழகாய் வர்ணிக்கிறாய்
பிடிக்காது முறைக்கையில் காது மடல் பிடித்திழுத்து மன்னிப்புக் கேட்கிறாய்
இன்றென்ன நிறமென்று தினம் வினவுகிறாய்
பிறகு 'ஓ புடவை நிறத்தைச் சொன்னியா ?' என்று கேட்டு 'பக்கி' என்று திட்டவைக்கிறாய்
பூ வாங்கித் தருகிறாய்
புடவை பரிசு தருகிறாய்
சினிமா என்றால் சம்மதிக்கிறாய்
கோவிலென்றாலும் கூட்டிச்செல்கிறாய்
ம்ம்ம்
சொல்லவா ? சொல்லிவிடவா ?
மெதுவாகத்தான் ... மெதுவாகத்தான் ... எனை ஈர்க்கிறாய்

***

No comments:

Post a Comment