Friday, January 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 11

வளையல் அணிந்த வானவில்லா ?
தங்கத் தாமரையா ?
அங்கம் முழுதும்
தங்கமாய் ஜொலிக்கும் தாரகையா ?
ரம்பை ஊர்வசி போன்று
மண்ணில் மிதக்கும் மங்கையா ?
மயிலின் அழகும் குயிலின் குரலும் இணைந்தப்பதுமை
நீயொரு புதுமையா ?

பார்த்த விழி பார்த்துக்கொண்டே இருக்குதே
உனைப் பாராதிருக்க மனம் மறுக்குதே
எனக்குள் லட்சம் சிறகுகள் முளைக்குதே

கண்ணே
உனை நான் ... உனை நான் ... கண்டவுடன்


***

மழை வந்தால் குடையின் ஞாபகம்
குளிரும் பொழுது போர்வை ஞாபகம்
பசி எடுக்கையில் உணவின் ஞாபகம்
மயிலைப் பார்த்தால் தோகை ஞாபகம்
கோவிலுக்குள் வந்தால் பயபக்தி ஞாபகம்
ஏதோ நடக்கையில் மட்டும் தான் என்னவோ ஞாபகம் வருகிறது
ஆனால்
உன் நினைவு மட்டும் எல்லாப் பொழுதிலும்
மழையோ பனியோ
வெயிலோ இரவோ
மலரில் முகமும்
கனவில் தினமும்
வானவில்லிலும்
பாலைவனப் பயணத்திலும்
சாரக்காத்து வீசும் போதும்


***

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நாம் ஒன்றாய் நடந்த கடந்தச் சாலைகள்
ஏறி இறங்கியக் கடைகள்
நின்று தின்று விளையாடிய இடங்கள்
கண்ணில் ஊதி மண் துரத்திய நிமிடங்கள்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
ஒன்றாய்ச் சென்ற தீவாளித் தேடல்கள்
ட்ரையல் அறையில் சேர்ந்தே உடை மாற்றியப் பொழுதுகள்
கண்ணில் நீர் வரும் வரை சிரிக்கச் சிரிக்க பேசிய நாட்கள்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
பாதி தின்று பாதி ஊட்டி விட்டத் தருணங்கள்
தேதி பார்த்துத் தலை கோதி விட்டத் தருணங்கள்
செலவு செய்ததென்று பொய்க்கணக்கு சொல்லியத் தருணங்கள்
பொய்க்கணக்கு என்று தெரிந்தும் முத்தம் தந்துக் கடன் அடைத்தத் தருணங்கள்

இன்னும் இன்னும் ......
ஓயாதக் கடலலை போல்
தேயாத நம் காதல் அலைகளை
நினைத்து நினைத்து பார்த்தேன்


***

அழகிலே நீயொரு அசுவம்
இந்த மண்ணில் நீயொரு அபூர்வம்
நீ கூட இருந்தால் என்னுள் ஒரு கர்வம்

நீ என் தவத்தின் வரம்
உன்னோடு பழகுதல் ஆனந்தம்
உன் பார்வையில் தெரியுது பரிசுத்தம்

உன்னால் என்னுள் நிசப்தம்
உன் நினைவுகளால் நிறையுமென் சித்தம்
தினந்தோறும் உன்நினைவலைகள் என்னை வந்து முட்டும்
நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்

***

No comments:

Post a Comment