Sunday, November 27, 2016

மட நெஞ்சம்


அடச்சீ அஞ்சி மணிதான் ஆவுதா இன்னும் ன்னு டென்சன்
அடக்கடவுளே ஏழு மணி ஆயிடுச்சே ன்னு டென்சன்
சுடுதண்ணி வரலியேன்னு டென்சன்
தோசை பெருசா இருந்தா ஒரு டென்சன்
காஃபி சூடா இல்லேன்னாடென்சன்
லிஃப்டு வர லேட்டாச்சுன்னா டென்சன்
காலைலேயே டிராஃபிக் ஜாம் ஆச்சுன்னா டென்சன்
பார்க்கிங் கெடைக்கலேன்னா டென்சன்
இவ்ளோ டென்சனுக்கு நடுவுல ஆபிசுக்கு ஓடி,
'நேத்து நாம போட்ட போஸ்டுக்கு தமிழ்நாடே கதறிருக்கும்'ன்னு நெனச்சிக்கிட்டே FB கனெக்ட் பண்ணா,
ஒரு நாயும் கண்டுக்கலியே ன்னு டென்சன்
ஒரு பக்கியும் லைக் கம்மெண்ட் போடலியே ன்னு டென்சன்,
ஏறியிற தீயிலே எண்ணையை ஊத்துற மாதிரி
தமிழ் தெரியாத ஒருத்தே லைக்கு போட்டதைப் பார்த்து நொம்ப டென்சன்
அவனுக்கு இருக்கும் ஆர்வம்,
ஏன் மத்த நண்பர்கட்கு இல்லேன்னு நெனச்சி இன்னும் டென்சன்,
'நீயெல்லா உயிரோட இருக்கணுமா? ' ன்னு
ரெஸ்ட் ரூம் கண்ணாடி முன்னாடி
விரலை நீட்டி பேசிக்கிட்டு இருக்கும்போது
இன்னொருத்த நுழைய
'இவனுக்குத்தா தமிழ் தெரியாதே' ன்னு மனசு சமாதானம் சொல்லி,
'நாளைக்கு என்ன போஸ்ட் போடுவோம்னு' சிந்திக்குதே,
'அட மட நெஞ்சே, என்ன சொல்ல உன்னை ?'

No comments:

Post a Comment