கற்றது மறவாது,
முதுமையில் வாடாது,
நட்பானோர் ஏமாற்றாது,
வளம் என்றும் குறையாது,
இளமை அகலாது,
நோய் அண்டாது,
மனம் சலிக்காது,
மனைவியின் காதல் மங்காது,
பொருள் வரும்வழி பிழையில்லாது,
புகழ் நீங்காது,
வார்த்தை பிறழாது,
வாழ்க்கையில் துன்பம் வாராது, 
கொடுக்கையில் தடை ஏற்படாது,
அரசாங்கம் தவறாது,
அருள்புரிய வேண்டுகிறேன்,
தூய்மையான உன்பாதத்தில் 
அடியவரோடு அடியவனாய் 
அடிபணிகிறேன்;
கடவூரில் வாழும் 
அபிராமி அன்னையே,
காக்க வேணும் எமையே;
No comments:
Post a Comment