Thursday, June 5, 2014

நடுத்தெருவில் ஆண்டவன்



"...........
...........
பேசு தெய்வமே நீ பேசு,
நீ பேசு,
தெய்வமே நீ பேசு
இன்று என்னோடு .......
நீ பேசு ... தெய்வமேஏஏஏ,
தெய்வ..மே."
பாட்டு முடியும்வரை
பரவசநிலையில் கேட்டுக்கொண்டிருந்த தெய்வம்,
பாடியவரைப்
பார்த்துப் பேச
பாய்ந்தோடி வந்தது;

ஆண்டவன் வந்ததை
அறியாத அன்பர்
அங்கிருந்து நகர்ந்தார்,
அவசர கதியில்;

அழைத்தவர் யாரென்று
அறியாத ஆண்டவன்
அப்பாவியாய்
நடுத்தெருவில்;

1 comment:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    விடைபெறுமுன்...

    ReplyDelete