Wednesday, June 19, 2013

திருவாசகம் - ஆசை பத்து

திருவடி காட்டி எனை ஆட்கொண்டத்
தலைவா,
அறியாமை அகற்றி
வா என்றெனை
உன்னோடழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், இறைவா.
      நரம்பு மூளை தோல் இவற்றாலான
இவ்வுடம்பை விட்டு விலகி, ஐயனே
என்னைத் தங்களோடழைத்துக்கொள்ள
தயை புரிய வேணும் என்று
ஆசைப்பட்டேன், ஹரனே


சீல் வழிய, ஆசை ஈக்கள் மொய்த்து
அழியும் இவ்வுடல் நீங்கி, சங்கரா
'ஐயோ' என்று நீ இரங்கி
அன்போடென்னை உன்னோடு
அழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், சர்வேஸ்வரா.
      உடம்பும் என்னோடு தொடர்ந்து
வருகுதே, எனை
உன்னோடு இணைய விடாது
தடுக்குதே
உமைபாகா,
உன்னை வணங்குகிறேன்,
மனமுருக வேண்டுகிறேன்;
உன் திருவடி அடையவே
ஆசைப்பட்டேன், உருத்ராட்சா;


உடம்போடு ஒட்டாது
தனித்திருந்தேன், உமையோனே
உன்னால் ஆட்கொள்ளத்
தகுந்தவன் என்று
கண்டோர் எல்லாம் சொல்ல
ஆசைப்பட்டேன், சடையோனே.
      இளைத்தேன், இனி
இங்கிருக்க விரும்பிலேன்;
இந்தப் பொய்யான வாழ்க்கையிலிருந்து
என்னை விடுவிக்க வேண்டும், அத்தா;
உன் முக ஒளியையும்
திருப் புன்னகையையும் காண
ஆசைப்பட்டேன், முத்தா;


மண்ணுலகத்தாரும்
விண்ணுலகத்தாரும்
வழிபட்டுப் போற்றும் வரதா,
முக்தி அளித்து
ஆட்கொள்ளும் விஸ்வேஸ்வரா,
உன் திருப்பெயர் அனைத்தும்
உச்சரித்து வழிபட
ஆசைப்பட்டேன், விருடவாகனா;
      ஆராவமுதா,
உன் திருவடிகளைக்
கையால் தடவி,
தலையில் ஏந்தி
உன் புகழ் பாடி
தீயைச் சேர்ந்த மெழுகாய் உருக
ஆசைப்பட்டேன்,
ஆலகண்டா;

குறை பல நிறைந்த
இவ்வுடலை விடுத்து, சிவனே,
உன் இடம் சேர,
உன் பார்வை ஒளியில் பரவசமடைய,
உன் அடியார் கூட்டத்துள் இணைய
ஆசைப்பட்டேன், சங்கரனே;
      மாதரது
மாய வலையில்
மாட்டி நான் அவதியுற்றேன்,
மகேஸ்வரா, உன் திருவாய்
மலர்ந்து 'அஞ்சேல்' என்று கூற
ஆசைப்பட்டேன், மகாதேவா.

No comments:

Post a Comment