Wednesday, June 12, 2013

சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம்



      நாகங்களே நகையாய்,
நெற்றியில் ஒரு கண்ணோடு,
உடலெங்கும் திருநீறு பூசி
எல்லோரையும் ஆள்பவனாய்
என்றும் எளியவனாய்
எங்கட்கு அருள்பாலிக்கும் பரமேஸ்வரா
உன் பாதம் பணிகிறேன்;

      மந்தாகினி நீரினால் அபிஷேகம், ஆராதனை,
மந்தாரை மலரால் ஆனந்த அர்ச்சனை
சந்தனப் பூச்சு இவற்றால் ஜொலிக்கும் எங்கள் தேவா,
நந்தி தேவர் மற்றும் பலருக்குத் தலைவா,
உன் பாதம் பணிகிறேன்;

சி       சிவந்த ரூபிணி பார்வதியின் பதியே,
தக்ஷனின் கர்வம் அழித்த மகாநிதியே,
நல்லோரைக் காக்க நஞ்சுண்ட
நீலகண்டா,
விடையே கொடியாய்க் கொண்ட
விருடவாகனா,
உன் பாதம் பணிகிறேன்;

வா       வசிட்டர் அகத்தியர் ஆகியோர்
வணங்கிய தேவா,
தேவர்கள் வணங்கும்
திருலோச்சனா,
சூரிய சந்திர நெருப்பை
முக்கண்ணாய்க் கொண்ட
முக்கண்ணா,
உன் பாதம் பணிகிறேன்;

      யக்ஷ சொருபனாய்*,
ஜடாமுடி தரித்தவனாய்
பினாக வில்லை ஏந்தியவனாய்
என்றும் எங்களைக் காப்பவனாய் விளங்கும்
திகம்பரா
உன் பாதம் பணிகிறேன்;

-------------------------------------------------------------------------
* - மரம் செடி கொடி இடையே வாழ்பவர்

No comments:

Post a Comment