Wednesday, October 5, 2016

செய்த பாவம்தான் என்ன ?



விழிக்கையில் விழித்து
அழைக்க நினைக்கையில் ஓடிவந்து முன்னின்று
பால்தேய்க்கச் சென்றால் காஃபி கலந்து வைத்து
சுவையாய் சமைத்து
இன்னும் பல சேவை செய்யும்
பாரியாளுக்கு
பரிசாய்
பதினெட்டாயிரத்தில் வாங்கித்தந்த
பனாரஸ் 
பட்டுப்புடவையில்
புலப்படாத அழகு 
பக்கத்துவீட்டுப் பைங்கிளியின்
நூத்தியம்பது ரூபாய்
நூல்புடவையில் 
நயமாய் தெரியுதே,
மடநெஞ்சே
நீ செய்த பாவம்தான் என்ன ?

2 comments:

  1. பெண்களின் மன ஆழம் புலப்படாதது . இப்போது புடைவையில் கொஞ்சம் தலை காட்டுகிறது வாழ்த்துகள் என்பதிவின் பின்னூட்டம்கண்டு வந்தேன்

    ReplyDelete