Wednesday, October 12, 2016

என் தவறோ ?



கனவில்லாது
கண் விழித்தப்பின்னும் 
அலுவலகத்தில் வேலையின்றி
அமர்ந்திருக்கும் பொழுதும்
பழையக் கவிதைகளின் மேல்
பார்வையோட்டும்போதும்
அழகுபெண்டியரை
அரைக்கண்ணால் கண்டு ரசிக்கும்போதும்

ஏனோ இப்பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருவதில்லையே,
இதுவும் என் தவறோ ?

No comments:

Post a Comment