Friday, October 10, 2014

ஆண்டவனுக்கு நன்றி

கண் திறவாது உனைக்
கனவில் கண்டு களித்திருக்கும் போதும்

கண்ணடித்துச் சிரித்துப் பேசிப் பழகும் போதும்

விரல் தடவி விஷமம் செய்யும் போதும்

மெல்ல தோளில் இடித்து
நீ முறைக்கையில்
ஏதுமறியாதவன் போல் உனைப் பார்க்கும் போதும்

எனை ஆணாய்ப் படைத்த
ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் நவில்கின்றேன்.

No comments:

Post a Comment