Saturday, February 1, 2014

உறங்க விடு

ஏன் இப்படி ...
என்னைச் சுற்றியே வருகிறாயே ...

கை கால் இடை முகம் எல்லாவிடமும்
நீ முத்தமிட்டத் தடம்
ஒரு சின்ன இடுக்கு கிடைத்தாலும் போதும்,
நுழைந்து விடுகிறாய்.

காலையில் கண்டுகொள்ளமாட்டாய்,
இரவில் தூங்கவிடமாட்டாய்;
சத்தமில்லாது வருவாய்,
சங்கீதம் இசைப்பாய்;
சங்கடத்தில் நெளியவைப்பாய்.

விழி விரித்துத் தேட
உனைக் காணாது விளிக்கும்,
நெஞ்சம் படபடக்கும்;

இன்றாவது எனைத் தூங்கவிடு;
என் உறக்கம் கலைக்காது எனை உறங்க விடு .... கொசுவே;

No comments:

Post a Comment