Sunday, November 3, 2019

பொன்மாலைப் பொழுதில் 65

500. கைகேயி கேட்ட வரத்தினால் தசரதன் கலங்கினான்.
சீதை கடத்திச் செல்லப் பட்டதை உணர்ந்து  இராமன் கலங்கினான்.
இன்று போய் நாளை வா என்றதும் இராவணன் கலங்கினான்.
கர்ணனின் வீரத்தைக் கண்டு அர்ச்சுனன் துரோணர் கலங்கினர்.
இதிகாசத்தில் சுத்தமான வீரர்கள் நிறைய கலங்கியிருக்கின்றனர்.
ஐ மீன் ... வீரர்கள் விசும்பி ... ஆனால் ... நீ ~மா~ வீரன் இல்லையே, பின்னே உனக்குள் கலக்கமேனோ?
*கண்களில் என்ன ஈரமோ?*


499. அபூர்வ ராகங்கள் ல வரும் 'எங்கப்பா யாருக்கு மாமனாரோ அவரோட மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் ன்னா அப்போ அவருக்கும் எனக்கும் ...' புரிலைல,
காக்கா கா கா ன்னு கத்தறதுனால நாம காக்கா ன்னு கூப்டுறோமா இல்ல நாம காக்கான்னு கூப்டுற- தால காக்கா கா கா ன்னு ...  புரில?
பைத்திய சாலைல பைத்தியங்க- ளுக்கு வைத்தியம் பார்க்குற பைத்திய வைத்தியருக்கு பைத்தியம் புடிச்சதுன்னா அந்த பைத்திய வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க ... புரியலியா?
இதெல்லாம் புரியலிய, அப்போ *நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னால் புரியுமா?*


498. எத்தனை நாள் தான் சண்டையிடப் போகிறீர்கள் ?
இன்னும் எத்தனை நாள் தான் முறைத்துக் கொண்டு திரியப் போகிறீர்கள் ?
உமக்கென்றிருப்பது எமக்கெதற்கு? நாங்கள் ஆசைப்படுவதில்லை.
எம்முடையது எதன் மீதும் நீர் உரிமை கொண்டாடுவது முறையில்லை.
பேசுவோம் பழகுவோம் நல்ல வண்ணம் வாழ முயல்வோம்.
அடிதடி சண்டை எதற்கும் தீர்வு ஆகா.
அமைதியாய் இருப்பதற்கு கோழை என்று கொள்ளலாகா.
உதவுகிறோம் உபத்ரவம் வேண்டா.
சேர்ந்தே உயர்வோம் சீண்டல் வேண்டா.
எங்கள் வாளும் வெட்டும் எங்கள் குண்டும் வெடிக்கும்.
சண்டைக்கு சண்டை தீர்வல்லவே.
*உயிரெல்லாம் ஒன்றே*


497. அதெல்லாம் ஒரு காலம்,
புது பேனா, உன்னிடம் தந்து எழுதிப் பார்க்கச் சொன்னதும், என் பெயரை நீ எழுதிப் பார்த்து, நல்ல ஸ்மூத்தா எழுதுது என்றதும்,
அதெல்லாம் ஒரு காலம்,
புது சட்டை அணிந்து, ஒடிவந்து காட்டி எப்படிகீது என்று புருவம் உயர்த்திக் கேட்டதும், இரு விரல் கோர்த்து நீ O காட்டியதும்,
புது கொலுசணிந்து கால் மேல் கால் போட்டமர்ந்து ஆட்டி ஆட்டி நீ ஓசை எழுப்ப நான் கண்ணடித்தும்,
அதெல்லாம் ஒரு காலம்,
நான் கையில் வாட்ச் கட்டியிருக்க ஐந்து நிமிடத்திற்கொருமுறை மணி என்ன என நீ கேட்டு இருவரும் சிரித்ததும்,
அதெல்லாம் ஒரு காலம்,
காதல் நெஞ்சில் காலூன்றி கனவு பல தந்த காலம்
அன்பு பாசம் அக்கறை நட்பு எல்லாம் ஒன்றாய்க் கலந்திருந்த ஒரு ... ஒரு சுகானுபவம்.
ஒருநாள் மட்டும் உரசித் திரிந்து மறப்பது அல்ல காதல்
அது மழைச் சாரல், தென்றல், தீங்கிழைக்காப் புயல் மாசற்றப் புனல். என்றும் தொடரும் நிழல்.
இன்று நாம் அருகருகே அமர்ந்து பேச முடியாதென்றாலும்
இரு வேறு இடத்தில் ~பிரிந்து~ இருந்தாலும் ...
நாம் என்றும் ஒன்று தானே
இன்றும் என்னுள் நீ, உன்னுள் நான் உண்டு தானே.
நம்முள் நாம் பாதி பாதி தானே
*நீ பாதி, நான் பாதி ... கண்ணே*


496. முனிவரின் வேடத்தில் வந்து தானே கடத்திச் சென்றான் சீதையை, தான் யார் என்று செல்லாமலேயே.
தவறு தான், யார் ஏன் எதற்கு என்றேதும் சொல்லாமல் மறைந்திருந்து தானே அம்பெய்தினான் ராமன்.
கண்டதும் சிநேகித்துக் கொண்டேனே துரியோதனன், கர்ணன் தான் யார் என்று செல்லாமலேயே.
அர்ச்சுனன் பீமனையும் யார் என்று செல்லாமலேயே ஜராசந்தனுடன் போரிட அழைத்துச் சென்றான் கண்ணன்.
அதற்காக ... இப்படியா ...
நேருக்கு நேர் நின்று பேசாது, பிடித்திருக்கா இல்லையா எனக் கேட்காது, குறுகுறுவென்று
*சொல்லாமலே ... யார் பார்த்தது ?*


494. கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும், பின்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
காலம் கனியும் வரை கனவு கண்டிரு கடவுளைத் துதித்திரு.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

No comments:

Post a Comment