Monday, June 22, 2015

மழை



மழை
இதே மழை தான்
இந்த மழையில் தான் ஒரு நாள் ....

நானும் அவளும்
நாணல் காற்று போல
நான் சாயும்போதெல்லாம் அவளும் சாய
நான் நிமிரும்போதேல்லாம் அவளும் நிமிர,

ஒருவரோடொருவர் ஒன்றிக்கிடக்க, அவ்விடம்
வேறொருவரும் இன்றிக்கிடக்க

'மேகம் நான் மழை நீ' என்று சொல்ல,
'எப்படி' என்றவள் வினவ,
'நான் முகம் கருக்கும் போதெல்லாம் நீ அழுது ஓடிவிடுகிறாயே' என்று விளக்க,

 'அலை நீ, கரை நான்' என்றவள் சொல்ல
'நானுனைத்தேடி ஓடி வரும்போதெல்லாம்
நீ எனைத் தடுத்து அணைத்துக்கொள்கிறாயே அதனாலோ?' என்று பதிலுரைக்க

'மலர் நீ மணம் நான்' என்றவள் சொல்ல 
 'மணம் இன்று கம்மி, குளிக்கலையோ ?' என்று கமண்ட,
'எருமை எருமை' என்று செல்லமாய் அழைத்து
முத்தம் பல தந்துவிட்டு ஓடிவிட்டாள்.

இதே மழை நாளில் தான்
ஒரு நாளில்  ....

No comments:

Post a Comment