Tuesday, June 30, 2015

மழை



மழை
இதே மழை தான்
இந்த மழை நாளில் தான்
ஒரு நாள் ...

என் வேலையில் நான் மூழ்கியிருக்க
எந்த சத்தமும் செய்யாது அவள் வந்து நிற்க
கன்னி வந்தது தெரியாது
காளை நான் கருமமே கண்ணாகக் கிடக்க
கால்மணி நேரம் கழிந்தபின் (பின்னால் சொன்னாள்)
'நாவென்னா நாளைக்கு வரவா' என்றவள் சொல்ல,
'எப்போ வந்தே' என்று நான் வினவ,
கோபப்பார்வை வீசிவிட்டு விருட்டென்று அவள் செல்ல,
பின்னாலே கெஞ்சி கொஞ்சியப்படி நான் ஓட,
கோவிலுக்குள் அழைத்துச்சென்று
மன்னிப்பு கேட்கச் சொல்ல,
சூடம் உள்ளங்கையில் கொளுத்தி
மன்னிப்பு கேட்க,
'எரியுது' என்று நான் கெஞ்ச,
கன்னியவள் கண் கலங்கி
கோவிலென்றும் பாராது
உள்ளங்கையில் முத்தமழை பொழிய
உடனே இன்னொரு சூடம் வாங்கி ஏற்றி,
மங்கை பார்க்கையிலே
அப்படியே அதை முழுங்கி
'ஐயோ' என்றவள் அலற
எரியுது' என்று நான் மீண்டும் கெஞ்ச,
கோவிலென்றும் பாராது .....

இந்த மழை நாளில் தான்
ஒரு நாள் ...

No comments:

Post a Comment