Monday, March 10, 2014

அபிராமியம்மைப் பதிகம்


எனை விட
எல்லாவிதத்திலும் வலியவர் எனை
எல்லாவிடத்திலும் துரத்த,

எனைப் பீடித்த
நீங்காப் பிணி
நிழலாய் எனைத் துரத்த,

கோபம் கொண்டு நான் கொதித்தெழ – அக்
கோபமே எனை வேகமாய்த் துரத்த,

வறுமை தரித்திரம் வேதனை
இவை எனை
இடைவிடாது துரத்த,

நரைத்த முடி, மறைத்த கண் இவற்றோடு
முதுமை எனை முப்பொழுதும் துரத்த,

பருவ வயதுப் பாவங்கள்
பகையாகி எனை
பாவம் பார்க்காதுத் துரத்த,

வாட்டி எடுத்து, வஞ்சனை
விடாது எனைத் துரத்த,

காலம் மறக்காது
கதறும் பசி
பாவம் பார்க்காது எனைத் துரத்த,

பசி போக்க
பாவங்கள் செய்ய, அப்பாவங்கள்
பாய்ந்துவந்து எனைத் துரத்த,

பதவி பணம் இருந்தால் இத்தனை
பிரச்சனைகளும் பஞ்சாய்ப் பறக்குமே என்ற
பதிமோகம் எனைத் துரத்த,

பலகாரியம் செய்ய முற்பட,
அவையனைத்தும் எனைத் துரத்த,

அவசரத்தில் செய்யும் செயல் கண்டு
அத்தனைப்பேரும் ஊரும் சிரிக்க,

நேரம் நாள் எல்லாம்
நிற்காது ஓடி எனைத் துரத்த,

நாக்கு வறண்டு,
கால்கள் தளர்ந்துத்
தள்ளாடும் எனை
அந்தக் காலனும் துரத்துவானோ ?

அகில உலகையும் காக்கும்
அபிராமித் தாயே,
அருள்வாய் நீயே;


No comments:

Post a Comment