Friday, November 15, 2013

சந்திரசேகராஷ்டகம்



சந்திரசேகரா, உன்னைச்
சரணடைந்தேன்;

சந்திரனைத் தலையிலும்,
செந்தழலைக் கையிலும் கொண்டவனே,
சொக்கத் தங்கம் போல்
ஜொலிக்கும் கைலாய மலையில் காட்சித் தருபவனே,
சங்கடம் அழித்து
சந்தோஷம் அளிக்கும்
சங்கரனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

தாமரை மலர் போன்ற
பாதங்களை உடையவனே,
வாசனை நிரம்பிய மலர்களைக் கொண்டு
பூஜிக்கப்படுபவனே,
நெற்றிக் கண்ணால் காமனை எறித்தவனே,
சாம்பலைத் தன் உடலெங்கும் பூசிக்கொள்பவனே,
அழிவில்லாதவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பாகன் எனும் அரக்கனின்
பார்வையைப் பறித்தவனே,
பாம்புகளையே நகைகளாய் தரித்தவனே,
பார்வதி தேவி வலது பக்கம் அலங்கரிக்க அர்தநாரியாய் அருள்பவனே, பாயசமாய் விடத்தைப் பருகியவனே, தன்
பக்கத்தில் திருசூலத்தைச் சொருகியவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

நாரதராலும் மற்ற முனிவர்களாலும் புகலப்படுபவனே,
மூவுலகையும் காப்பவனே,
அந்தகாசுரனை அழித்தவனே,
அடியவர் கேட்பதை அளித்து
ஆனந்தத்தில் ஆள்த்துபவனே,
எமனை ஏதும் செய்ய முடியாது செய்தவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

கவலைகளைக் களைபவனே,
ஆபத்துச் சமயத்தில் அபயம் அளிப்பவனே,
ஆணவத்தால் ஆடிய தக்ஷனை
அழித்தவனே,
பாவங்கள் பற்றாது பார்த்துக்கொள்பவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பக்தர்களின் புதையலே,
எல்லாவற்றிலும் முதலே,
அடையமுடியாதவைகளுக்கும் அப்பாற்ப்பட்டவனே,
எப்பாடுபட்டும் எவராலும்
புரிந்துகொள்ள முடியாப் புதிராய் நிற்பவனே,
புனிதமே,
ஐம்பூதங்களும் அடிபணியும் ஐயனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

மூவுலகையும் படைத்துக் காத்து, அழித்தாள்பவனே,
எல்லாவற்றிலும் எல்லாக் காலமும் நின்று ஆட்டிவைப்பவனே,
எதற்கும் மூலமானவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

No comments:

Post a Comment