Friday, March 30, 2012

பாதச் சுவடுகள்

கடவுளைச் சந்தித்தேன் ஒருநாள்;
வாழ்க்கையில் நான் வாழ்ந்த,
கடந்து வந்த பாதையைக்
காண்பித்தார்;


எங்கும் எல்லா வழியிலும்
இரண்டு ஜோடி பாதச் சுவடுகள்;

உன்னோடு நான்
எப்போதுமிருந்தேன்;
உன்னை விட்டு ஒருபொழுதும்
விலகாது இருந்தேன்;
இதை உணர்த்தும்
இப்பாதச் சுவடுகள்;

விளக்கினார்;
வியந்து நோக்கினேன்;
கர்வமின்றிப் பேசினார்;
கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்;

ஓரிடம் மட்டும்,
ஒருஜோடி பாதச்சுவடுகள் மட்டும்;

ஐயனே, சிவனே
இங்கே மட்டும் ஒரு ஜோடி மட்டும்,
இது எந்த காலம் ?
வினவினேன் நான்;

இது உன் கஷ்ட காலம்;
வேலை இழந்து, வறுமையில் வாடியக் காலம்;
உன் பாவக்கணக்கு நீ சுமந்த காலம்;
அவமானப்பட்டு, அலைகழிக்கப்பட்டு
நீ வருந்தியக் காலம்;


சாந்தமாய்ச் சொன்னார் கடவுள்;
சத்தமாய்க் கத்தினேன் நான்;

சந்தோசமாய் நான் குதித்துத் திரிந்த வேளையில்
என்னோடு இருந்த நீர்,
சுக போகங்களில் உல்லாசமாய் நான் மகிழ்ந்தக் காலங்களில்
என்னோடு களித்த நீர்,
வெற்றி பெற்று நான் வாழ்வில் உயர்கையில்
என்னோடு வந்த நீர்,
எவ்வளவு பூசை உமக்கு செய்தேன்,
என் கஷ்ட காலத்தில்
என்னை விட்டுச் சென்று இருக்கீறே, இது ஞாயமா ?

சத்தம் கதறலாய் மாறியது;
என் கண்ணீர் துடைத்துச் சொன்னார் கடவுள்;

‘மகனே,
உன் கஷ்டக் காலம் முழுதும்
ஒரு பாதச் சுவடுகள் இருப்பது உண்மை தான்,
ஆனால் அது உன்னுடையதன்று !’


குழம்பிப் போனேன் நான்;
தொடர்ந்து சொன்னார் அவர்;

'உன் கஷ்டக் காலத்தில்
உன்னை சுமந்து கொண்டு வந்தேன் நான்,
நீ காணும் அந்தப் பாடச் சுவடுகள்
என்னுடையவை;
துயரக் கடலில்
நீ தத்தளிக்கும் காலத்தில்
நான் படகாய் இருந்து
உன்னைச் சுமந்து கரை சேர்த்தேன்'.


விளக்கினார் கடவுள்;
விவரமறிந்து வணங்கினேன் நான்;

நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை;
இறைவன் காட்டும் அன்பிற்கு அளவு இல்லை;

என்னை நீ நேசிக்கிறாயோ இல்லையோ
நான் உன்னை நேசிப்பேன்;
என்னை நீ நாடுகிறாயோ இல்லையோ
நான் உனக்கு உதவுவேன்;
உன்னோடு என்றும் இருப்பேன்;
உன்னை சுமந்து கொண்டு இருப்பேன்;


கடவுள் சொன்னார்;
கட்டியணைத்துக் கொண்டேன் நான்;

No comments:

Post a Comment