Monday, September 23, 2013

ஆடை

சிவப்பாடை அணிந்து வந்து எனைச்
சித்ரவதை செய்கிறாள்;

பச்சை ஆடையில் பாவை எனைப்
பார்த்து பரிகசிக்கிறாள்;

நீல நிறத்தில் என் முன் நின்று தன்
நயனங்களால் நலம் கேட்கிறாள்;

கருப்பாடை கன்னியின்
கவர்ச்சியைக் கூட்டுகிறது;

வெள்ளை நிறத்தில் தேவதை ஒன்று
விழியின் முன்னே மிதக்கிறதே;

ஆடை ...
அணிந்தாலும் அவஸ்தை,
அணியாது நின்றாலும் அவஸ்தை;

No comments:

Post a Comment