Wednesday, March 6, 2013

காத்திருக்கே, தனிமையில கெடக்கே





திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனிய
இதுவரைக்கு வரலே ஏன்னு தெரியலே,
நாளைக்கு வரலா இல்லே அடுத்த வாரம் வராலான்னு - இன்னு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.

தபால்காரரு வாராரு போறாரு
தகவல் ஏது சொல்லாம தப்பிக்கராரு
மணியக்காரரு தவறாம நலம் விசாரிக்கராரு
அடிக்கடி பட்டணம் போறாரு
ஆனா ஒன்னப்பத்தி மட்டு பேச மாட்டேங்கறாரு.

கோவில் பூசாரி -
நெலத்த கோவிலுக்குக் குடு ஒ
நெலம மாறு
கவல தீரும்னு சொன்னாரு,
எனக்கு ஒன்னு தெரிலே - அவரு
பொண்ணுக்கு கண்ணாலம் ஆச்சி அசலூருல.

ஆத்துல தண்ணி இல்லே என்
அழுகை ஓயலே;
வாழ்க்கைல நீஞ்சுரே நீஞ்சுரே
கரை எங்கே தெரியலே;
காதலிச்ச ஒனக்கு என்னை
கட்டி வாழத் தெரியலே
பூத்து நின்ன எனக்கு
காதல்னா என்னன்னு புரியலே.

கூட இருந்த கிளி,
ஜோடி ஒன்னு சேத்துக்கிச்சி,
தனியா இருக்கு என்னைப் பாத்து
சவுக்கியமான்னு கேட்டு சிருச்சிகிச்சி;
என் வேதனை அதுக்குப் புரியலே,
நீ தரும் சோதனை எனக்குப் புரியலே;

சட்டுபுட்டுன்னு வந்தா
சடங்கான பொண்ணு
சம்சாரமாவா, இல்லே
சங்கருத்துக்கிட்டு
சாமியாவா, நல்ல
சேதி சொல்லு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.


No comments:

Post a Comment