Thursday, February 7, 2013

இரயில் பயணம்




'பாத்துப் போடா, போய் சேந்த உடனே போன் பண்ணு '
'இட்லி காலைலேயே சாப்ட்ருங்க, சக்கரை தனியா டப்பால இருக்கு '
'மச்சி நெனச்சது முடிஞ்சதா ?'
'அம்மாவ கேட்டதா சொல்லு  '
'காய் கலோவ் கயு, மறந்துறாதே '
'அப்பா டாட்டா '
'குட்டி போய்டு வரவா'
'பாத்து போடி, வாடகை ஞாபகமிருக்கட்டு '

ம்
எத்தனை உறவுகள்
எத்தனை மனிதர்கள்
எத்தனை எதிர்பார்ப்பு

வழியனுப்ப ஆளில்லாது
வரவேற்கவும் யாருமில்லாது,
தனியே தன்னந்தனியே
நான் மட்டும்.

இரயில் பயணங்கள் பல
சிந்தனை என்றும் ஒன்றே.

No comments:

Post a Comment