Monday, January 7, 2013

தியானம் - முதல் படி

ஓம் ...... நமசிவாய 
ஓம் ...... நமசிவாய
ஓம் ...... நமசிவாய  
     இன்னிக்கு ஏன் கீதா என்னப்பாத்து சிரிச் ...
முருகா .... முருகா ...
ஓம் ... ஓம் 
     வித்யாவும் நித்யாவும் புடவைல அழகா இருந்தாங்க, பட்  
ஓம் ஓம் ஓம் 
     ஓரப் பார்வை, கொஞ்சம் சிரிப்பு - கீதா 
     என் உயிரே நீதா... 
சிவாய நமக 
சிவாய நமக 
     சிற்றிடை, 2 ஜான் இருக்குமா, அளந்து பாக்...
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் 
     அவளின்றி அசையாதோ எதுவும் ?
     நடையில் மயில் அசைந்து அசைந்து அசைத்து அசைத்து ... ஐயோ 
     என்னை ஆணாய் அவளைப் பெண்ணாய் படைத்த ஆண்ட...
ஆண்டவா என்னைக் காப்பாற்று 
சிவாய நம ஓம் ... சிவாய நம ஓம் 
சிவாய நம ஓம் ... சிவாய நம ஓம் 
     சிரிக்கும் போது கன்னத்தில் குழி,
     அவள் பேச்சு குயில் மொழி,
     குனிகையில் பதற்றம் - எனைப் 
     பார்க்காது போனாலோ ஏமாற்றம் 
     பாவையர் பலவிதம் - பாவி நான், 
     என் பார்வை ஒரேவிதம் 
ராம கிருஷ்ணா கோவிந்தா 
துணை நீ வா கோபாலா 
கிருஷ்ண கிருஷ்ண கேசவா 
கெட்டது மனது 
பார்த்து பார்த்து ஆனது பழுது 
ஆண்டவன் துணை இனிது 
     ரம்யாவுக்கு மட்டும் என்ன குறை ?
     கொஞ்சம் அலட்டல்,
     மத்தபடி அழகு தான்;
     கன்னத்து குழி ஒன்று போதாதா ...
     சமந்தா மாதிரி வேணும்னு 
     நா ஒன்னு ஆசைப்படலே 
     எனக்குத் தெரியாதா ஆசையே அழிவுக்கு ...
புத்தம் சரணம் கச்சாமி ..
ஓம் ... ஓம் ... ஓம் ...
ஓம் ... ஓம் ... ஓம் ...

No comments:

Post a Comment