Sunday, June 5, 2011

Thoughts

3 comments:

  1. ஒடுக்க நிலை
    சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
    சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
    மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
    வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. 45

    கிரியை
    சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
    பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
    காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
    சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? 46

    அறிவு நிலை
    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. 47

    அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
    துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
    ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
    புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே. 48

    தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
    தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
    ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
    தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 49

    சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
    மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
    சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
    செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. 50

    கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
    எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
    பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
    மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே. 51

    ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
    மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
    கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
    வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 52

    ReplyDelete
  2. அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
    திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
    உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
    மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே. 60

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே. 61

    மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
    ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
    மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
    உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே. 62

    கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
    குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
    உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
    திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே! 63

    தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
    தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
    தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
    தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே! 64

    கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
    பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
    அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
    எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே. 65

    கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
    உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
    பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
    அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே! 66

    ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
    கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
    நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
    தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே. 67

    ReplyDelete
  3. உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
    உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
    உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
    உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே. 68

    மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
    நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
    பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
    ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே. 69

    இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
    மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
    சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
    மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர். 70

    அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?
    விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ
    விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
    அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே. 71

    சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
    உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
    கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
    உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே. 72

    உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
    மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
    அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 73

    ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
    பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
    தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
    வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே! 74

    அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
    நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
    உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
    அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? 75

    ReplyDelete