Saturday, November 5, 2011

உத்தவ கீதை - 2

துவாரகா நகரத்தில்
கெட்ட சகுனங்கள் பல
நிகழ்ந்தது;
அது
ஊர்ப் பெரியவர்களை
வருத்தத்தில்
ஆழ்த்தியது;
கிருஷ்ணனிடம்
சென்றனர்;
தமக்கு
வழி காட்ட
வினவினர்;

'நல்லோர் சாபம்
நமை வாட்டுகிறது;
துவாரகை விட்டுச்
செல்வோம்,
பிரபாச தீர்த்தம் நோக்கிச்
செல்வோம்;
அவ்வாறு சென்றால்
உயிர் பிழைப்போம்;
அன்னதானம் செய்வோம்;
நல்ல வழியில் வாழ்வோம்;
நாம் பெற்ற சாபத்தால்
வரும் சங்கடத்தைத் தடுக்க
அதுவே வழியாகும்;'

பரந்தாமன் உரைத்தான்;
அவன் சொல்லுக்குப் பணிந்து
மக்கள் புறப்பட்டனர்
பிரபாச தீர்த்தம் நோக்கி;
வருங்காலத்தில் விழையப்போகும்
இன்னல்களை மனதில் தேக்கி;


பகவான் பேசுவதை எல்லாம்
பொறுமையுடன் கேட்டார் உத்தவர்;
பின் பேசினார்;
'பரந்தாமா, தேவாதி தேவா,
எல்லோரின் இன்னல்களையும் தீர்க்கும்
எசொதை மைந்தா,
தங்களைப் பிரிந்து
எப்படி இருப்பேன் நான் ?
தங்களோடு வைகுண்டம்
வரவேணும் நான்,
இதற்கு அருள் புரிய வேண்டும் நீர்;'


உத்தவரின் தூய
உள்ளத்தையும் அதில்
விளைந்த எண்ணத்தையும் கேட்ட
கிருஷ்ணன் பின்வருமாறு
உரைத்தான்;

'உத்தவரே,
உத்தமரே,
உயர்ந்தவரே,
நாளை
நடக்கப்போதை
நானுமக்குச் சொல்கிறேன்;
கேளும்;
பிரம்மன் கேட்டுக்கொண்ட
பணிகலெல்லாம்
பழுதேதுமின்றி நிறைவேற்றிவிட்டேன்;
பெற்ற சாபத்தால்
யாதவ குலம்
தன்னோடே சண்டையிட்டு
அழிந்துபோகும்;
இன்றிலிருந்து ஏழாவது நாள்
இந்த நிலத்தை
நீர் விழுங்கும்;
என்று நான் இவ்வுலகத்தை விட்டுச்
செல்கிறேனோ,
அன்று முதல் இவ்வுலகத்தை
கலிபுருடன் பிடித்துக்கொள்வான்;
இவ்வுலகம் மங்களம் இழந்து
மாசுபட்டுப் போகும்;
மக்கள் மாக்கள் ஆவார்கள்;
அதர்மத்தையேச் செய்வார்கள்;'

இதனைத் தொடர்ந்து
இன்னும் சொன்னான் கிருஷ்ணன்;
அவை ...


                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment