Wednesday, November 16, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 2

போதப்பி நாடு;
மலைகளும் அடர்ந்த காடுகளும்
நிறைந்த நிலப்பரப்பு;
பச்சை பசெலேன வயல்கள்;
துள்ளிக் குதித்து விளையாடும்
புள்ளி மான்கள்;
ஆடுகள், மாடுகள்; இன்னும்
யானைகள்;

பயம் கருணை இரண்டும் இல்லா
இவ் வேடவர் குலத்திற்குத்
தலைவன்
நாகன் என்பவன்.
குற்றம் செய்வதைத் தன் குலத்
தொழிலாய்க் கொண்டவன்;
வன மிருகங்களைத் தன்
விருப்பம் போல்
வதைத்து வந்தான்;
தத்தை என்பவள் நாகனுக்குத்
தாரமானவள். எப்பொழுதும்
புலிகளின் நகத்தையும்,
பாம்புகளின் தோலையும்
ஆபரணமாய்
அணிந்திருப்பாள்;

வன விலங்குகள் நிறைந்த
வனத்தில் வேட்டையாடி
வாழ்ந்து வந்த நாகன்
தத்தை தம்பதியருக்குப்
பிள்ளை இல்லை என்ற
பெருங் கவலை இருந்தது;
விலங்குகளை
வேட்டையாடிக் கொன்ற
வேந்தனை இக்கவலை
வேட்டையாடாது கொன்றது;
அவர்கள்
மகிழ்வைத் தின்றது;

தன்னால் முடியவில்லை என்று
தெரிந்த பின் ஆண்டவனை எண்ணத்
தொடங்கியது மனித மூளை;


அழகாய் ஒரு
ஆண் மகவு வேண்டி
அந்த
ஆறுமுகனைத் துதித்தான்
அரசன்;

தத்தை கர்ப்பமானாள்; பிள்ளையின்
தந்தை மகிழ்ந்துபோனான்;

மகவு பிறந்தது;
மகிழ்ச்சி பொங்கியது;

வலியவனாய்ப் பிள்ளை; அதனால்
வைத்தான் தந்தை 'திண்ணன்'
என்னும் பெயரை;

                                                                        ( கதை தொடரும் )

No comments:

Post a Comment