கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் !
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 5 !!
கிருஷ்ணா,
நீ செய்பவைகள் இனிமை,
நீரில் நீ மிதப்பது இனிமை,
உன் திருட்டுத்தனம் இனிமை,
உன்னை என்னிக்கிடப்பது இனிமை,
நீ பேசினால் இனிமை,
உன் அமைதி இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீச்சி மதுரா !
சலீலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 6 !!
உன் குஞ்சலம் அழகு,
மாலை அழகு,
யமுனை நதி அழகு,
அந்த நதியில் ஆடும் அலைகள் அழகு,
நதியின் நீர் அழகு,
நீரில் மிதக்கும் தாமரை அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னால்
எல்லாமே அழகு;
கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம் !
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 7 !!
கிருஷ்ணனோடு ஆடும் கோபியரெல்லாம் அழகு,
அங்கு அரங்கேறும் லீலைகலெல்லாம் அழகு,
கிருஷ்ணனோடு அவர்கள் ஐக்கியமாதல் அழகு,
அவர்கள் அடையும் ஆனந்தம் அழகு,
அவர்களைக் காண்பது அழகு,
அவர்களின் பணிவு அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னை
அடைந்தோர் எல்லோரும் அழகு;
கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா !
தழிதம் மதுரா பழிதம் மதுரா
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 8 !!
அவனோடிருக்கும் கோபர்கள் இனிமை,
அவர்தம் கன்றுகள் இனிமை
கன்றுகளைக் காக்கும் அந்தக் கொம்பு இனிமை
அவர்களின் பிறப்பு இனிமை
அவர்கள் பழித்து விளையாடும் ஆட்டம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்னால்
எல்லாமே இனிமை;
Wednesday, August 31, 2011
Tuesday, August 30, 2011
மதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 1 of 2
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம் !
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 1 !!
கிருஷ்ணா,
உன் உதடுகள் இனிமை,
உன் முகம் இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் இதயம் இனிமை,
நீ சிரித்தால் இனிமை,
அழகான உன் நடை இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
வச்சனம் மதுரம் சரிதம் மதுரம்
வசனம் மதுரம் வலிதம் மதுரம் !
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 2 !!
வார்த்தைகள் இனிமை, உன்
கதைகள் இனிமை, உன்
உடைகள் இனிமை, உன்
செயல்கள் இனிமை, உன்
எண்ணங்கள் இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
வேனுர் மதுரோ ரேனுர் மதுரம்
பானிர் மதுரம் பாதோவ் மதுரம் !
ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 3 !!
புல்லாங்குழல் இனிமை, உன்
பாதங்களில் தூசி இனிமை,
கை இனிமை, கால் இனிமை, உன்
நாட்டியம் இனிமை,
நட்பு இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம் !
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 4 !!
பாடல் இனிமை, நீ
பருகுவது இனிமை,
உண்பது, உறங்குவது இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் நெற்றித் திலகம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம் !
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 1 !!
கிருஷ்ணா,
உன் உதடுகள் இனிமை,
உன் முகம் இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் இதயம் இனிமை,
நீ சிரித்தால் இனிமை,
அழகான உன் நடை இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
வச்சனம் மதுரம் சரிதம் மதுரம்
வசனம் மதுரம் வலிதம் மதுரம் !
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 2 !!
வார்த்தைகள் இனிமை, உன்
கதைகள் இனிமை, உன்
உடைகள் இனிமை, உன்
செயல்கள் இனிமை, உன்
எண்ணங்கள் இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
வேனுர் மதுரோ ரேனுர் மதுரம்
பானிர் மதுரம் பாதோவ் மதுரம் !
ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 3 !!
புல்லாங்குழல் இனிமை, உன்
பாதங்களில் தூசி இனிமை,
கை இனிமை, கால் இனிமை, உன்
நாட்டியம் இனிமை,
நட்பு இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம் !
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 4 !!
பாடல் இனிமை, நீ
பருகுவது இனிமை,
உண்பது, உறங்குவது இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் நெற்றித் திலகம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;
Monday, August 29, 2011
நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.4
பெய்யுமாமுகில் போல்வண்ணா ! உன்றன்
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே
மழை தரும் கருத்த
முகிலின் நிறமொத்த
மாதவா, உன் பேச்சு,
மலர்ந்த தாமரை போன்றுன்
முகம் எல்லாம் எங்களை
மயக்கி
மகிழ்வித்தாலும்
உன் செயல் எங்களை
வருந்தவைக்கிறது; இருந்தும்
வானளந்த உத்தமா உன்
உள்ளம் வருந்த ஒரு
வார்த்தை கூட நாங்கள்
உரைக்க மாட்டோம்;
சிரீதரா, மண்ணாலான எங்கள்
சிறிய வீடுகளை வந்து
சேதப்படுத்தாதே;
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே
மழை தரும் கருத்த
முகிலின் நிறமொத்த
மாதவா, உன் பேச்சு,
மலர்ந்த தாமரை போன்றுன்
முகம் எல்லாம் எங்களை
மயக்கி
மகிழ்வித்தாலும்
உன் செயல் எங்களை
வருந்தவைக்கிறது; இருந்தும்
வானளந்த உத்தமா உன்
உள்ளம் வருந்த ஒரு
வார்த்தை கூட நாங்கள்
உரைக்க மாட்டோம்;
சிரீதரா, மண்ணாலான எங்கள்
சிறிய வீடுகளை வந்து
சேதப்படுத்தாதே;
Sunday, August 28, 2011
நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.3
குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிடையேலே
வளமான நுண்ணிய மணல் கொண்டு,
வளையல் கைகளால் எங்களை
வருந்தி இந்த
வீடுகளை நாங்கள்
வடிவமைத்துள்ளோம்; முதலையின்
வாயில் சிக்கிக்கொண்ட
வாரணத்தை
விரைந்து சென்று
விடுவித்தவனே,
பாற்கடலில்
பள்ளி கொள்ளும்
பெருமானே, உன் ஓரப்
பார்வையில் எங்களைப்
பார்த்து அருள் புரி,
பாவை நாங்கள் உன் திருவடி
பணிகிறோம்; எங்கள்
சிற்றில்களை
சிதைக்காதிருக்க
வேண்டுகிறோம்;
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிடையேலே
வளமான நுண்ணிய மணல் கொண்டு,
வளையல் கைகளால் எங்களை
வருந்தி இந்த
வீடுகளை நாங்கள்
வடிவமைத்துள்ளோம்; முதலையின்
வாயில் சிக்கிக்கொண்ட
வாரணத்தை
விரைந்து சென்று
விடுவித்தவனே,
பாற்கடலில்
பள்ளி கொள்ளும்
பெருமானே, உன் ஓரப்
பார்வையில் எங்களைப்
பார்த்து அருள் புரி,
பாவை நாங்கள் உன் திருவடி
பணிகிறோம்; எங்கள்
சிற்றில்களை
சிதைக்காதிருக்க
வேண்டுகிறோம்;
Saturday, August 27, 2011
நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.2
இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்எழாததெம் பாவமே
நாராயணா,
நாள் முழுவதும்
நாங்கள் குனிந்து முதுகு
வலிக்க இச்சிறு
வீடுகள்
கட்டுகின்றோம்; அங்ஙனம்
கஷ்டப்பட்டு
கட்டிய வீட்டை எங்களைக்
காண, ரசிக்க விடு;
கட்டி முடிக்கும்முன்
கலைக்காதே;
குழந்தையாய் நீ ஆலிலையில்
கண்ணுறங்கும் போதே உன்னைக்
கண்டு உன்மேல் அன்பு
கொண்டு
எப்பொழுதும் உன்னையே
எண்ணி இருப்பவர்கள் நாங்கள்;
எங்கள் மேல் இறக்கம் கொள்ளாது
எங்களுக்கு அருள் செய்யாதிருக்க
என்ன பாவம் செய்தோமோ நாங்கள்.
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்எழாததெம் பாவமே
நாராயணா,
நாள் முழுவதும்
நாங்கள் குனிந்து முதுகு
வலிக்க இச்சிறு
வீடுகள்
கட்டுகின்றோம்; அங்ஙனம்
கஷ்டப்பட்டு
கட்டிய வீட்டை எங்களைக்
காண, ரசிக்க விடு;
கட்டி முடிக்கும்முன்
கலைக்காதே;
குழந்தையாய் நீ ஆலிலையில்
கண்ணுறங்கும் போதே உன்னைக்
கண்டு உன்மேல் அன்பு
கொண்டு
எப்பொழுதும் உன்னையே
எண்ணி இருப்பவர்கள் நாங்கள்;
எங்கள் மேல் இறக்கம் கொள்ளாது
எங்களுக்கு அருள் செய்யாதிருக்க
என்ன பாவம் செய்தோமோ நாங்கள்.
Friday, August 26, 2011
நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.1
நாமமாயிர மேத்த நின்ற
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே
ஆயிரம் பெயர் கொண்டஆனந்த நாராயணனே,
மானுடனாய், எங்கள்
மாமியின்
மகனாய் இம்
மண்ணில் பிறந்தவனே, உன்
மாயை விளையாட்டுக்களிலிருந்து
தப்பிக்க முடியாது
தவிக்கிறோம் நாங்கள்;
மன்மதன் தன்னை
மகிழ்விக்கும்
மக்களுக்கு உதவும்
மாதம் என்பதால், அவனை
வேண்டி நாங்கள் இந்த
வண்ண வண்ண
வீடுகளை
வரைந்து
வழிபடுகிறோம்; எங்கள்
வேண்டுதலுக்கு இடையூறு
செய்யும் சிரீதரா, எங்கள்
சிறு வீடுகளைச்
சேதம்
செய்யாதே;
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே
ஆயிரம் பெயர் கொண்டஆனந்த நாராயணனே,
மானுடனாய், எங்கள்
மாமியின்
மகனாய் இம்
மண்ணில் பிறந்தவனே, உன்
மாயை விளையாட்டுக்களிலிருந்து
தப்பிக்க முடியாது
தவிக்கிறோம் நாங்கள்;
மன்மதன் தன்னை
மகிழ்விக்கும்
மக்களுக்கு உதவும்
மாதம் என்பதால், அவனை
வேண்டி நாங்கள் இந்த
வண்ண வண்ண
வீடுகளை
வரைந்து
வழிபடுகிறோம்; எங்கள்
வேண்டுதலுக்கு இடையூறு
செய்யும் சிரீதரா, எங்கள்
சிறு வீடுகளைச்
சேதம்
செய்யாதே;
Thursday, August 25, 2011
நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.10
கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக்
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே.
கரும்பே வில்லும், மலர்க்
கணையும்
கொண்டிருக்கும்
காமதேவனைத் தொழுது,
பாகாசுரனின் வாயைப்
பிளந்த அந்த
பரமாத்மாவை அடைய வேண்டி,
பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரின்
பெண் கோதை
பாடிய இந்தப்
பாடல்களைப்
படிப்போர்
அந்தக் கண்ணன் திருவடிகளை
அடைந்து,
அவனுக்கு கைங்கரியம் செய்யும்
பாக்கியம்
பெறுவார்;
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே.
கரும்பே வில்லும், மலர்க்
கணையும்
கொண்டிருக்கும்
காமதேவனைத் தொழுது,
பாகாசுரனின் வாயைப்
பிளந்த அந்த
பரமாத்மாவை அடைய வேண்டி,
பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரின்
பெண் கோதை
பாடிய இந்தப்
பாடல்களைப்
படிப்போர்
அந்தக் கண்ணன் திருவடிகளை
அடைந்து,
அவனுக்கு கைங்கரியம் செய்யும்
பாக்கியம்
பெறுவார்;
Subscribe to:
Posts (Atom)