Sunday, November 3, 2019

பொன்மாலைப் பொழுதில் 65

500. கைகேயி கேட்ட வரத்தினால் தசரதன் கலங்கினான்.
சீதை கடத்திச் செல்லப் பட்டதை உணர்ந்து  இராமன் கலங்கினான்.
இன்று போய் நாளை வா என்றதும் இராவணன் கலங்கினான்.
கர்ணனின் வீரத்தைக் கண்டு அர்ச்சுனன் துரோணர் கலங்கினர்.
இதிகாசத்தில் சுத்தமான வீரர்கள் நிறைய கலங்கியிருக்கின்றனர்.
ஐ மீன் ... வீரர்கள் விசும்பி ... ஆனால் ... நீ ~மா~ வீரன் இல்லையே, பின்னே உனக்குள் கலக்கமேனோ?
*கண்களில் என்ன ஈரமோ?*


499. அபூர்வ ராகங்கள் ல வரும் 'எங்கப்பா யாருக்கு மாமனாரோ அவரோட மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் ன்னா அப்போ அவருக்கும் எனக்கும் ...' புரிலைல,
காக்கா கா கா ன்னு கத்தறதுனால நாம காக்கா ன்னு கூப்டுறோமா இல்ல நாம காக்கான்னு கூப்டுற- தால காக்கா கா கா ன்னு ...  புரில?
பைத்திய சாலைல பைத்தியங்க- ளுக்கு வைத்தியம் பார்க்குற பைத்திய வைத்தியருக்கு பைத்தியம் புடிச்சதுன்னா அந்த பைத்திய வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க ... புரியலியா?
இதெல்லாம் புரியலிய, அப்போ *நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னால் புரியுமா?*


498. எத்தனை நாள் தான் சண்டையிடப் போகிறீர்கள் ?
இன்னும் எத்தனை நாள் தான் முறைத்துக் கொண்டு திரியப் போகிறீர்கள் ?
உமக்கென்றிருப்பது எமக்கெதற்கு? நாங்கள் ஆசைப்படுவதில்லை.
எம்முடையது எதன் மீதும் நீர் உரிமை கொண்டாடுவது முறையில்லை.
பேசுவோம் பழகுவோம் நல்ல வண்ணம் வாழ முயல்வோம்.
அடிதடி சண்டை எதற்கும் தீர்வு ஆகா.
அமைதியாய் இருப்பதற்கு கோழை என்று கொள்ளலாகா.
உதவுகிறோம் உபத்ரவம் வேண்டா.
சேர்ந்தே உயர்வோம் சீண்டல் வேண்டா.
எங்கள் வாளும் வெட்டும் எங்கள் குண்டும் வெடிக்கும்.
சண்டைக்கு சண்டை தீர்வல்லவே.
*உயிரெல்லாம் ஒன்றே*


497. அதெல்லாம் ஒரு காலம்,
புது பேனா, உன்னிடம் தந்து எழுதிப் பார்க்கச் சொன்னதும், என் பெயரை நீ எழுதிப் பார்த்து, நல்ல ஸ்மூத்தா எழுதுது என்றதும்,
அதெல்லாம் ஒரு காலம்,
புது சட்டை அணிந்து, ஒடிவந்து காட்டி எப்படிகீது என்று புருவம் உயர்த்திக் கேட்டதும், இரு விரல் கோர்த்து நீ O காட்டியதும்,
புது கொலுசணிந்து கால் மேல் கால் போட்டமர்ந்து ஆட்டி ஆட்டி நீ ஓசை எழுப்ப நான் கண்ணடித்தும்,
அதெல்லாம் ஒரு காலம்,
நான் கையில் வாட்ச் கட்டியிருக்க ஐந்து நிமிடத்திற்கொருமுறை மணி என்ன என நீ கேட்டு இருவரும் சிரித்ததும்,
அதெல்லாம் ஒரு காலம்,
காதல் நெஞ்சில் காலூன்றி கனவு பல தந்த காலம்
அன்பு பாசம் அக்கறை நட்பு எல்லாம் ஒன்றாய்க் கலந்திருந்த ஒரு ... ஒரு சுகானுபவம்.
ஒருநாள் மட்டும் உரசித் திரிந்து மறப்பது அல்ல காதல்
அது மழைச் சாரல், தென்றல், தீங்கிழைக்காப் புயல் மாசற்றப் புனல். என்றும் தொடரும் நிழல்.
இன்று நாம் அருகருகே அமர்ந்து பேச முடியாதென்றாலும்
இரு வேறு இடத்தில் ~பிரிந்து~ இருந்தாலும் ...
நாம் என்றும் ஒன்று தானே
இன்றும் என்னுள் நீ, உன்னுள் நான் உண்டு தானே.
நம்முள் நாம் பாதி பாதி தானே
*நீ பாதி, நான் பாதி ... கண்ணே*


496. முனிவரின் வேடத்தில் வந்து தானே கடத்திச் சென்றான் சீதையை, தான் யார் என்று செல்லாமலேயே.
தவறு தான், யார் ஏன் எதற்கு என்றேதும் சொல்லாமல் மறைந்திருந்து தானே அம்பெய்தினான் ராமன்.
கண்டதும் சிநேகித்துக் கொண்டேனே துரியோதனன், கர்ணன் தான் யார் என்று செல்லாமலேயே.
அர்ச்சுனன் பீமனையும் யார் என்று செல்லாமலேயே ஜராசந்தனுடன் போரிட அழைத்துச் சென்றான் கண்ணன்.
அதற்காக ... இப்படியா ...
நேருக்கு நேர் நின்று பேசாது, பிடித்திருக்கா இல்லையா எனக் கேட்காது, குறுகுறுவென்று
*சொல்லாமலே ... யார் பார்த்தது ?*


494. கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும், பின்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
காலம் கனியும் வரை கனவு கண்டிரு கடவுளைத் துதித்திரு.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

Tuesday, October 22, 2019

பொன்மாலைப் பொழுதில் 64

492. வாரணம் ஆயிரம் சூழ வந்து நாரணன் தன் கைத்தளம் பற்றியக் கனவு கண்டாள் ஆண்டாள்.
நாலைந்து நரிகள் சூழ இடையில் மான் ஒன்று நின்று தவிக்க, கருங் காளையொன்று தனைக் காத்த கனவைச் சொன்னாள் ராதை.
காத்திருந்தேன்,எதிர்பார்த்தேன், வருவான் என்று நம்பியிருந்தேன், வந்தான் ... தாடி மீசையோடு, சிங்கம் போல் ... எனக்காக, இந்த ஜானுவிற்காக ராம் வந்த கனவு சொன்னாள்.
ம்ம்ம் ... இதெல்லாம் சரி தான்,
ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து  இப்படியில்லையே இப்போது என்ன ஆயிற்று என்று யோசித்தபடியே,
என்ன இது என்ன இது என்று குழம்பியபடியே உறங்கிப்போக
அப்போது ... அட இது கனவா? இதுதான் அதுவா ?.
கா வில் ஆரம்பிக்க ல் லில் முடிய ...
*காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*


491. ஐயனே பிறவாமை வேண்டும், பிறந்தால் உமை மறவாமை வேண்டியது ஔவையார்.
நா தங்கள் நாமம் செப்ப வேண்டும், கை தங்களைக் கும்பிட வேண்டும், கால் தங்கள் சேவையில் ஈடுபட வேண்டியது அனுமன்.
ஹே பண்டரிநாதா தாங்கள் இங்கேயே தங்கி  பக்தர்கட்கு அருள வேண்டியது துகாராம்.
மழை பொழிய, வயல் விழைய, கொட்டில் நிறைய நல்லோர் வாழ வேண்டியது ஆண்டாள்.
அவரவர்க்கு வேண்ட ஆயிரம் இருக்க, எனக்கு ... ம்ம்ம் ...
கொடுத்துப் பழக வேண்டும்,
இரவில் உறக்கம்  வேண்டும், செயல் முடிக்கும் துணிவு வேண்டும்
கம்பனின் கவிநயம் கசடறக் கற்க வேண்டும், காளிதாசனின்
*மேக தூதம் பாட வேண்டும்*.


490. சந்தோஷமாயிருக்கிறது. மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
பாவையினுள் பரவசம் படர்கிறது.
நன்றாய்த் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்ட போதினும், என்றும் இருக்கும் சோர்வு இன்று இல்லை.
எல்லாம் உன்னால்தானென சொல்லவும் வேணுமா ?
சொல்லாவிட்டால் உனக்குத் தான் புரியாது போகுமா ?
கள்வா, புயலாய் இப் பூவையின் நெஞ்சினுள் நுழைந்தக் காத.....
காலையில் ... வந்திடுவாய் தானே?
என் காத்திருப்புக்கெல்லாம் பலன் கிட்டும் தானே.
நீ வந்ததும் உன்னோடு கதை பல பேச வேண்டும். கை கோர்த்த படி பனியில்  நடக்க வேண்டும்.
உனக்குப் பால் போளி செய்துத் தர வேண்டும். எனக்கு அதை நீ ஊட் ~டினால்~ டும் போது உன் விரலைக் கடித்து விட வேண்டும்.
வரைந்த ஓவியங்களை உனக்குக் காட்டித் தகுந்த பரிசு கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் ... இன்னும் ... ஐயோ மணி எட்டு தானா ? இந்த இரவு 'மட்டும்' விரைந்து  முடியாதா? நிலவு மறையாதா ? கிழக்கு விடியாதா ?
*செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா?*


489. 'காடோ கடலோ நீயிருக்கும் இடந்தான் னெனக்கு அயோத்தி, இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சீதை.
'போரா? நரகாசுரனா? இரு, நானும் வரேன், இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சத்யபாமா.
'கனிகண்ணன் போகிறான், நானும்; நீரும் உம் பைநாகப்பாயை சுருட்டிக் கொள்ளும்,  சேர்ந்தே போவோம்' சொன்னது திருமழிசை ஆழ்வார்.
'என்னது குற்றமா, என் பாட்டிலா, வா, நீயும் நானும் சேர்ந்தே போய் அந்த பாண்டியனை ஒரு கை பார்ப்போம்' என்று கோபத்தோடு கிளம்பியது சிவம்.
ஆடி, செல்வம் தொலைத்து வந்தவனை, 'கவலை விடு, பாண்டிய நாடு போவோம், இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் கண்ணகி.
நாம் மட்டும் ஏன் பிரிந்திருக்கணும்? வேறுபாடுகளை ரசிப்போம். ஒன்றாய் இருப்போம்.
*இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்*


488. கடலைக் கடக்கணும் என்றதும் வருண பகவான் பூஜையோடு தொடங்கினானே ராமன்.
வள்ளியை வளைக்க அண்ணனிடம் உதவி  வேண்டினான் வடிவேலன்.
பாரதப் போரில் வெற்றி பெற களபழியோடு ஆரம்பித்தான் துரியோதனன்.
சபரிமலை போவதற்கு முன் ஒரு மண்டலம் விரதம் தினம் பூஜை உண்டே.
இன்றும் கிராமங்களில் திருவிழா தொடங்குமுன் காப்பு கட்டுவதுண்டு.
அட எந்த கடிதமெனினும் மேலே புள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோமே.
ஒரு காரியம் செய்வதற்கு முன் ...
நானும் ... உன் கன்னத்தில் முத்தமிட *நேந்துக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வச்சி*


486. கருவறையில் சந்திர காந்தக் கல் இருப்பதால் வெயில் காலம் குளிராகவும் குளிர் காலம் வெப்பமாகவும் இருக்கும்  பெரிய கோவில் - அதிசய கோவில்.
கேரளபுரத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் கருப்பு வெள்ளை நிறத்தை மாற்றிக் கொள்கிறார் - அதிசய விநாயகர்.
விஜயவாடா அருகே, தரும் பானகத்தில் சரி பாதியைக் குடித்து மீதியை உமிழ்ந்து விடுகிறார் - அதிசய நரசிம்மர்.
ஒப்பிலியப்பன் கோவிலில், உப்பு இல்லை என்பதே தெரியாது அங்கு தரப்படும் - அதிசய ப்ரசாதம்.
தாராசுரம் கோவிலில் கல் ஒன்றை உருட்டி விட சரிகமபதநி ஓசை ஒலிக்கும் - அதிசய படிகட்டு.
அதிசயங்களோடு அதிசயம் நேற்று கற்றுக் கொண்டது, புதிய ஒரு ஆலாபனை, உன்னைக் கவர்வதற்கென்று அபூர்வமான, அழகான, ஆனந்தமான - *அதிசய ராகம்*

Sunday, October 13, 2019

பொன்மாலைப் பொழுதில் 63


484. கடல் கடந்து மாட மாளிகை பல ஏறி இறங்கி தேடி, கடைசியில் அனுமன் ராமனிடம் வந்து  சொன்னது ... கண்டேன் சீதையை.
எப்படி எங்கு என்றேதும் தெரியாது தவித்த குந்தி, கண்ணன் உண்மை சொன்னதும் அழுது கதறியது ... கண்டேன் பிள்ளையை.
செல்வத்தால் மயங்காது, ராஜ போஜனத்தில் மனம் லயிக்காது குசேலன் மனைவியிடம் கூறியது ... கண்டேன் கண்ணனை.
புது சூழல், புரியா மொழி, ராணுவம், தீவிரவாதம், அழுது போராடி மீட்டு ரோஜா கண்ணீர் மல்க  கதறியது ... கண்டேன் கணவனை.
அடங்காத கூந்தல், அடக்க முற்படும் விரல்கள், மருதாணி, வளையல், சிற்றிடை, கொலுசு ... வாவ் வாவ்;
எனக்கு ... நான்...
*கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*


482. தினம் விடிகிறது, நாள் முடிகிறது.
யாருக்காகவும் காத்திருக்காது இது தினம் நடைபெறுகிறது.
சந்தோஷத் தருணங்கள் சட்டென்று மறைந்து விடுகிறது.
சங்கடமான விஷயங்களை மறக்க மனது மறந்து விடுகிறது.
இன்றும் நீ எனை நினைத்தபடி எங்கேயோ இருப்பது தெரிகிறது.
எதற்கிப்படி விலகியிருகோம் எனத் தெரியாது மனது தடுமாறுகிறது.
காலம் கனியக் காத்திருப்போம் வேறென்ன செய்வது.
நாட்களை நகர்துவதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.
இதோ இன்று உனக்காகப் பாடுகிறேன்
*காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது*


481. கண்களாலே பேசி காளை என் நெஞ்சைக் கவர்தவள் நீயடி.
அன்பு பாசம் கொட்டி காதலைத் தழைக்கச் செய்தவள் நீயடி.
என் வெறும் வார்த்தைகளை கவிதையாய் மாற்றியவள் நீயடி.
எண்ணங்களில் வண்ணங்கலந்து ஓவியம் எனக் கற்பித்தவள் நீயடி.
உறக்கத்தின் உட்புகுந்து கனவில் வந்துக் கதைப்பவள் நீயடி.
இடை தெரிய உடை அணிந்து எனை தினம் இம்சை செய்பவள் நீயடி.
அன்பே அழகே *என் சுவாசக் காற்றே, சுவாசக் காற்றே ... நீயடி*


479. சிநேகம் சரியாய் அமைய வேணும்.
அதற்கும் இறை வரம் தர வேணும்.
விட்டுக் கொடுத்துப் பழக வேணும்.
எள் எனில் எண்ணையாக வேணும்.
இராமனுக்கு லக்குமண் போல, அனுமன் போல
துரியோதனனுக்கு கர்ணன் போல
பார்த்தனுக்கு பரந்தாமன் போல
ஜானுவுக்கு ராம் போல ...
எனக்கும் உண்டு, ஒரு தோழி, அன்று முதலே ... என்னுள் பாதி.
ஒற்றை வார்த்தையில் மட்டும், என்ன கேட்பினும்;
கொஞ்சம் சிடுசிடு, நிறைய கடுகடு.
கொஞ்சலாய் பேச எண்ணினாலோ ... ஐயகோ சனீஸ்வரனை சாப்பாட்டுக்கு அழைத்தது போலாகிவிடும்.
ஆனாலும் யார் கேட்டாலும் நான் சொல்வதென்னவோ
*எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி ... தென்றல் மாதிரி*


478. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
உறக்கத்திலிருந்து விருட்டென்று விழிக்கிறாய். விவரம் கேட்டாலோ முழிக்கிறாய்.
பல சமயங்களில் எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...
நங்காய்... அவ்வளவு சீக்கிரம் எமை விட்டு நழுவ ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

475. அசோக வனத்தில் சீதை எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ^,
வாலி மாயாவி யுத்தம் முடிய குகை வாசலில் சூக்ரீவன் எத்தனை நாட்கள் காத்திருந்தானோ^,
பெருவுடையாரை தரிசிக்க தஞ்சை மக்கள் எத்தனை நாட்கள் காத்திருந்தனரோ^,
படையப்பனை பழி வாங்க நீலாம்பரி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ,
சேனாபதியைக் காண அமிர்தவள்ளி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ
~ஜானு ராமை சந்திக்க~
இதோ பார் ... உனக்கென்னைப் பிடித்திருக்கு என்றெனக்குத் தெரியும், அதையுன் செவ்வாய் திறந்து .... ம்ம்ம்
*ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தே*


474. குடிலோடு சீதை மாயமாக ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
சூதாடி செல்வம் சுற்றம் இழந்து ஒன்றும் புரியாது
அடுத்தென்ன எனத் தெரியாது  தவித்தார் தருமர்.
தேவகியின் எட்டாம் பிள்ளை சிறை தப்பிய சேதி கேட்ட கம்சன்
ஒன்றும் புரியாது ஏதும் சொல்லாது பயந்து போனான்.
திடீரென்று ஜானு யமுனை ஆற்றிலே பாட
ராம் ஒன்றும் புரியாது என்ன சொல்வதென்று தெரியாது பதட்டமடைந்தான்.
எனக்கும் தான் .. சிரிக்கிறாய், பேசுகிறாய்,
என் காஃபி எடுத்துக் குடிக்கிறாய் ... வாவ், எனக்கு ... எனக்கு....
*ஒன்னும் புரியல ... சொல்லத் தெரியல*

Tuesday, October 8, 2019

பொன்மாலைப் பொழுதில் 62

473. ஒரு சின்னச்சிறு விதை மரமாய் வளர்ந்து நிற்பது விந்தை
ரசிக்கத்தான் நேரம் இருப்பதில்லை பரவாயில்லை
போகும் வரும் பாதையில் புல் தரை
பார்த்ததுண்டா பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்களை ?
நுகர்ந்ததுண்டா அதன் வாசத்தை?
இல்லை?சரி இங்குமங்கும் பறந்துத் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை?
அதன் சிறகோவியங்களை?
கொஞ்சிப் பேசும் பறவைகளின் குரல்களை? இல்லையா ...
மழையில் நனைந்தபடி ..
சரி விடுங்கள், இவற்றை ரசிக்காது வாழ்வது நம் உரிமை / கடமை.
பரவாயில்லை இதையாவது ...
காது திறந்து, மெய் மறந்துக் கேட்போமா ... இதோ தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை


472. பொன் மாலை நேரம்,
இனிய தட்பவெட்பம் நிலவும் நேரம்
ஆடிய ஆட்டங்கள் அடங்கும் நேரம்
பொருள் தேடியோடும் பொருளற்ற வேலையை புறம் தள்ளி விட்டு புனர் ஜென்மம் பெறும் நேரம்.
கவலை மறந்து கண்ணயரும் நேரம்
கனவுகள் பல முளைக்கும் நேரம்
செய்தவைகள் சரியா தவறா என்று எண்ணிப் பார்க்கும் நேரம்.
செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டுக் கொள்ளும் நேரம்.
நான் கவிதை மழையில் உனை நனைத்திடும் நேரம்.
நீ முத்த மழையில் எனை நனைத்திடும் நேரம்.
அப்படியே சில பல கதைகள் பேசியபடியே மான் புலியை வேட்டையாடும் நேரம்.
இங்கீதம் கொண்டு மேகத்தின் இடையில் மறைந்து நிலவு தூங்கும் நேரம்


470. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்ட பொன் மான் சீதை கைக்குக் கிட்டவில்லை.
உலகை சுற்றி வந்தும் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அடேய் என் இனிய ஸ்நேகமே, நான் … மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை


469. வனம் புக கைகேயி கட்டளை இட ராமன் மறுவார்த்தை பேசலையே
கணவனுக்கு கண் தெரியாததால் தன் கண்ணை கட்டிக் கொண்டா காந்தாரி மறுவார்த்தை பேசலையே
யாதவ குலம் அழிய சாபம் கிடைத்த போது அதை ஏற்றுக் கொண்டான் மாதவன் மறுவார்த்தை பேசலையே
இனி எமை தொடாதீர் என மனைவி சொல்ல கேட்டுக் கொண்டார் நீலகண்டர், மறுவார்த்தை பேசலை
சோழ நாடு போதும் பாண்டிய நாடு போவோமென கோவலன் சொல்ல
சம்மதித்தாலே கண்ணகி, அவளும் மறுவார்த்தை பேசலையே.
நீ மட்டும் ஏனடி, எதற்கெடுத்தாலும் ஒரு காரணம், சாக்கு போக்கு ...
முடிவாய்ச் சொல்லி விட்டேன், நாளை நாம் போறோம், கொண்டாடுறோம், அனுபவிக்கிறோம், நோ ... நோ
மறுவார்த்தை பேசாதே


468. மகளதிகாரத்தை இப்படி எழுதவா ?
நீ உணவுண்ணும் அழகைக் காண நிலவிங்கு காத்திருக்கே, காண வா.
இன்றுனக்கு எந்த நிறத்தில் ஆடை வேணுமென்று கேட்க வானவில் வாசல் வந்திருக்கே, விரைந்து வா.
உன் சிறு விரல்களில் இருந்து வெளிப்படும் தானியங்களை உண்ண பறவைகள் கால்கடுக்க காத்திருக்கே, இரை தூவிட வா.
கை சேர்த்து, ஒற்றைக் கண் மூடி நீ
வழிபடும் அழகை ரசிக்க தெய்வங்- கள் இங்கே திரண்டிருக்கு;
உன் பொக்கை வாயில் தன் பெயர் வராதா என்று ஏங்கிக் காத்திருக்கு;
இவை மட்டுமா, கொம்போடு பூனை ஒல்லி யானையும் ... நீ வரைவது போல் தனை வடிவமைத்துக் கொள்ள சகல ஜீவராசிகளும் காத்திருக்கு ...
*கண்ணனா கண்ணே ... கண்ணனா கண்ணே என் நெஞ்சில் சாயவா*


464. மலர்கள் மணக்கும் ஆனால் இங்கு மலர்ந்திருப்பவையோ மலர்ந்த உன் முகத்தை ஞாபகப்படுத்துகின்றன.
இந்த இருக்கையில் அமர்ந்து நீ பிசைந்து கையில் உருட்டி உருட்டித் தருவாய்,  நினைவிருக்கிறது.
இந்தப் புற்களின் மேலமர்ந்து எத்-
தனை கதைகள் பேசியிருக்கிறோம்
இப்போது தரை காய்ந்து கிடக்குது, நெஞ்சில் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் இருக்குது.
இதோ இதோ இந்த மரக் கிளையில் தான், ஈரமான தாவணி நீ காயப் போட்டு விட்டு மறைந்து நிற்க ... 'நாணமோ இன்னும் நாணமோ' பாட்டு நான் பாடி ...
ம்ம்ம் ... நீர் வரத்து மட்டும் குறைவு,
மற்றபடி வேறெதுவும் மாறவில்லை, நாம் ஓடி ஆடிக் காதலித்த இந்த
*வராக நதிக்கரையோரம் ...*


463. ராமன் வந்து மீட்கும் காலம் வரை இலங்கையில் வாடினாள் சீதை.
கௌரவர் தோற்கும் காலம் வரை
கூந்தல் விரித்திருந்தாள் பாஞ்சாலி
ஜராசந்த் அழிய காலம் வரும் வரை கண்ணனே ஒதுங்கி வாழ்ந்தான்.
நாடு மனைவி மகனை இழந்தும் சத்தியம் ஜெயிக்கும் காலம் வர காத்திருந்தான் அரிச்சந்திரன்.
பெரிய மீன் கிட்டும் வரை ஒற்றைக் காலில் தவமிருக்குதே கொக்கு.
எனவே எல்லாவற்றுக்கும் ...
காத்திரு, நேரம் மாறும்; துவளாது துடிப்போடு விழித்திரு.
உனக்கென்றோர் வழி பிறக்கும்.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

Sunday, September 22, 2019

The Engagement ring

The micro story is exclusively written for Estate Diamond Jewelry (https://www.estatediamondjewelry.com/microstory).



---------- story starts -------------------


We were neighbours as well thick friends at School and College, happily roaming together all times, till he decide to move apart for personal growth in life.


His absence made me felt as if I lost a part of self that I'm unable to concentrate on any other things for almost 3 years until I hear from my mother that he's back to town just an hour back.


I no more can hold my tears the moment he came and stand in my front, offering the engagement ring with the text "Love you " engraved in the centre.

---------- story ends -------------------



Tuesday, September 17, 2019

Hunterrr - story

You'll be redirectred to pratilipi's site. Click the READ NOW red button in that opened page.

Click to read Hunterr - story

Sunday, September 15, 2019

பொன்மாலைப் பொழுதில் 61

461. உனக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அரசாட்சி என்று சத்தியம் செய்தான் தசரதன்.
உனைத் தவிர இன்னொருத்தியை மனதளவிலும் தொடேன் என்று சத்தியம் செய்தான் ராமன்.
அர்ச்சுனனைத் தவிர வேறாரையும் கொல்லேன் என்று சத்தியம் செய்தான் கர்ணன்.
எசகுபிசகாய் எதையோ கேட்டு உண்மையைச் சொல என்று
தன் மேல் சத்தியம் வாங்கிக கொண்டாள் ஜானு.
எது எப்படியோ நான் உனக்கொரு சத்தியம் தருகிறேன்.
*கண்ணே கனியே உனைக் கைவிட மாட்டேன் *


460. அந்த காலத்தில் எல்லா செயலும் நடந்தது சமூக அக்கறையோடு.
மக்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தனர் ஒற்றுமையோடு.
விழைந்தது காடு, எல்லார்க்கும் கிட்டியது நல்ல சாப்பாடு.
ஆடு மாடு சகலமும் வாழ்ந்தது மகிழ்ச்சியோடு.
செழித்து வளர்ந்திருந்தது நமது பண்பாடு.
இன்றோ காணும் இடத்திலெல்லாம் கள்ளம் கபடு,
செய்யும் செயல்கள் யாவும் சுயநலத்தோடு.
நல்லது செய்ய நிறைய உண்டு கட்டுப்பாடு.
எங்கும் எதிலும் குறைபாடு,
எது எப்படியோ, புராணங்களும் இதிகாசங்களும் நிறைந்த என்,
*தங்கமே, தமிழுக்கில்லை தட்டுப்பாடு*


459. சில விஷயங்கள் இப்படித்தான் என்று தெரிந்துவிடும்.
மார்கழியில் குளிர்,
வழி வருதோ இல்லையோ தையில் பொங்கல் வரும்.
பகல் முடிய இரவு வரும், நிலவு மறைய பொழுது விடியும்.
சில விஷயங்கள் நடப்பது எப்போதோ என்று தோன்றும்.
எப்போது மீட்கப்படுவோம் எனத் தெரியாது அசோக வனத்தில் சீதை.
எப்போது முடிவாளோ எனத் தெரியாது கூந்தல் விரித்து திரௌபதி.
கோவலன் எப்போது வருவானோ எனத் தெரியாது காத்திருந்த கண்ணகி.
எப்போது கீதம் ஆகுமோ, தெரியலை
*இதோ இதோ... என் பல்லவி*


458. ஏழு மரங்களின் உட்புகுந்து வெளி வந்தது  ராமன் எய்திய அம்பு.
ஏழு ரிஷிகள் நகுஷனை இந்திரபுரி க்கு பல்லக்கில் தூக்கிச் சென்றனர்
ஏழாம் நாளில் நீ கொல்லப்படுவாய் என்று சாபம் பெற்றான் பரீக்ஷித்.
ஏழு நாட்கள் கோவர்தன மலையை கண்ணன் குடையாய்ப் பிடித்தான்.
உலக அதிசயங்கள் ஏழு.
கண்டங்கள் ஏழு.
வாரத்திற்கு நாட்கள் ஏழு.
வானவில்லில் வர்ணம் ஏழு.
ஏழுமலையான் இரண்டாவது பணக்கார தெய்வம்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் வலம் வருகிறான்.
ஏழு வார்த்தைகளில் எழுதப்பட்டது திருக்குறள்.
ஏழு - இதில் தான் எத்தனை விஷயங்கள் அடங்கி...அட ஆமால்ல,
*ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?*


457. காலபைரவரிடம் அனுமதி பெறாது சஞ்சீவி மலையை கடத்திய வாயு புத்ரனுக்கு சாபம் கிட்டியது.
அரக்கனை அடக்க அனுமதி கேட்ட ஆறுமுகனுக்கு அன்னை வீரவேல் தந்தாள்.
மகாவிஷ்ணுவை பார்க்க ஜய விஜயர் அனுமதி மறுக்க சன குமாரர்கள் சாபம் தந்தனர்.
பொறுத்தது போதும் பொங்கியெழு என்று அன்னை அனுமதி தந்ததும் மனோகரன் எதிரிகளைப் பந்தாடினான்.
தன் வீட்டிலேயே இருந்தாலும் 'ஜானு வரலாமா?' என்று அனுமதி கேட்டு பின் ராம் அறையினுள் நுழைந்தான்.
அனுமதி சம்மந்தமாக இத்தனை நடந்திருக்க, எதற்கு வம்பு ... நான்
*வரலாமா உன் அருகில்?*


456. ஹே ராதே, தெவிட்டாத் தேனே,
முதன் முதலில் உனைப் பார்த்தனுபவம் சொல்கிறேன், செவி தா நீயே.
மார்கழி மாதம், விடிகாலை நேரம்
குளிர் வாட்டி எடுக்கும் தருணம்.
யமுனா நதியில், கரை அருகில், ஒரு படகில், கூட சில கோபியரும்.
*
தோழி லலிதாவுடன் நீ ஓடி வந்தாய்.
எனைக் காணும் ஆர்வம் கண்ணில், மறைத்துக் கொண்டாய்.
அன்று தான் ப்ருந்தாவன் வந்த தகவல் சொன்னாய்.
மயிற்பீலி ஒன்றை என் முடியில் சூட்டி விட்டுச் சிரித்தாய்.
அக்கணமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டாய்.
*
பச்சை தாவணி, படபட பார்வை.
மை இட்டு அழகேற்றவில்லை, முன்னம் இட்ட தடம் விழியில்.
பூ சூடவில்லை, நுகர்ந்தேன், வாசம் மட்டும் கருங் கூந்தலில்.
எனை ஆள வந்திருப்பவள் என்று புரிந்ததந் நொடியில்.
*நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்*


455. ஹே ராதே,
இடையில் நீ இல்லாததால் இதர கோபியரோடு இணைந்து பேச இதயம் இசைவதில்லை.
அருகில் நீ இல்லாது அவஸ்தை பலவோடு அல்லாடுகிறேன்.
*
ஹே ராதே,
கனிந்த உன் காதல் பார்வை, தாமரை மணம் ததும்பும் உன் முகம்,
செவ்விதழ் செப்பும் இன்னிசை மொழிகள் இவையெல்லாம் என்னோடில்லாது தவிக்கிறேன்.
*
ஹே ராதே,
இதோ குழலெடுத்து வாசிக்கிறேன், மனதில் உன் முகம் இருக்கு, எனினும் ராகம் சோகமாகவே இருக்கு,
நீ வரும் வரையில் உனை எண்ணியே, உன் பெயரைச் சொல்லியபடியே, உனக்காகவே காத்திருக்கப் போகிறேன்.
*
ஹே ராதே,
வேறென்ன நான் செய்ய அன்பே ?
என்னை நீ இன்னும் என்ன செய்யப் போகிறாயோ
*என் காதலே ... என் காதலே*