Monday, June 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 27

208. பெண் :
அன்பாய் அக்கறையோடு குடும்பம் காப்பவள்,
கலகம் செய்வோரைக் கண்டால் காளியாய் மாறத் தயங்காதவள்.

பயங்கொள்ளாள், பாசாங்கு இல்லாள். பக்தி நெறியில் தர்மவழியில் வந்தச் செல்வம் காத்து தனலக்ஷ்மியாகிறாள்.

பண்பானவள், பணிந்து நடப்பவள், அபயம் கேட்டால் ஆதரித்து ஆனந்தலக்ஷ்மி ஆகிறாள்.

நெஞ்சில் வீரமேற்றி சாதிக்கவைத்து வீரலக்ஷ்மியாகி வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலக்ஷ்மி ஆகிறாள்.

தான் கற்றதைக் கற்பித்துக் கலைவாணியாய்க் காட்சிதருகிறாள்.
அனைவர்க்கும் அருசுவை அன்னம் உண்ணத் தந்து அன்னபூரணியாய் அவதாரமெடுக்கிறாள்.

வாழ்க்கையை வாசம் மிக்கப் பூச்சோலை ஆக்குவாள்.
சாதாரண ஆளையும் சாதனையாளனாக்கி சரித்திரம் படைப்பாள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறாள்.
காற்றாய் மலையாய் கடலாய் நதியாய் எல்லாமுமாய் எங்கும் நிறைகிறாள்.

அப்பெண்மையைப் போற்றுவோம்.
பாரினில் புகழ் பெறுவோம்.



207. விடிகாலையில் விடியும் வேளையில் பாடுவது பூபாளம்.
அம்சமாய் ஆண்டவன் முன் நீ ஆட பாடப்படுவது ஹம்சத்வனி.
மதிய வேலையில் மதுவந்தியும், மத்யமாவதி ராகமும்.
முன் மாலை வேளைக்குத் தாளமிட்டுப் பாட, ரசிக்க தர்பார்.
சாயங்காலத்தில் சவுகரியமாய்ப் பாட ஷண்முகப்ரியா, கல்யாணி.
இரவை ஆனந்தமாக்கிட ஆனந்த பைரவி, நீலாம்பரி.
எல்லா நேரத்திலும் பாட சங்கராபரணம், கரகரப்ரியாவும்.

இதெல்லாம் சரி,
பூமி வாழ மழை பொழிகையில்
*சின்ன சின்ன மேகம் பாடுவது தேவராகமோ?*



206. நமக்குள் இல்லை உறவு
தாமரையிலைமேல் தண்ணீராய்
சேராதும் பிரியாதும் நம் வாழ்வு
இருந்தும் எனக்குண்டு உன் தயவு
உன்மேல் எனக்குப் பரிவு
நம் காதலுக்கில்லை பிரிவு
தினம் வரும் உன்  நினைவு
கண்மூடினால் கனவிலுன் வரவு
கண்டுரசிப்பதுன் முகப் பொலிவு
அவ்வமயம் வானில் தெரியும் நிலவு
இது *பனி விழும் இரவு*


205. அடி எங்கள் அன்பின் ராதே,
கண்ணனைக் காணச் சென்றாயே
கண்டாயா? கண்டு பேசினாயா?
ரகசியமாய்ச் சிரிக்கிறாயே, கொஞ்சம் விவரம் சொல்லப் புரிந்துக் கொள்வோமே.
*
இடை சிறுத்தவளே,
அவன் நடை உடை உருவம் செப்பு, எம்செவி இன்புறவே.
காதலனவன் கள்ளப் பார்வையில் உனை மறந்து நின்றிருப்பாயே.
அவன் கொஞ்சல் பேச்சில் கோலமயில் நீ சொக்கிப்போனாயா?
குழலூதுகையிலும் உன் குழல் கலைத்து விளையாடினானா ? விவரம் சொல்லடி.
*
நயனங்களாலேயே நடனமாடும் நங்கையே நடந்ததை நவின்றிடு.
கண்ணே என்றழைத்தானா ? கட்டிப்பிடித்தானா? இதழில் இல்லை இடையில் எதையாவது தேடினானா?
எங்கே ஓடி ஒளிகிறாய்,
*சுந்தரி பெண்ணே ... சுந்தரி பெண்ணே நில்லு நில்லு*


204. எது என்றுத் தெரியவில்லை.
உனையொரு விநாடி எண்ணியவுடன் கவிதை பிறக்குதே, அதுவா ?
அழகென்று எவர் எதைச் சொன்னாலும் உன் ஞாபகம் வருகுதே, அதுவா ?
நீர் அருந்தும் போதும் நிலவைக் காணும் போதும் நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என்றெண்ணத் தோன்றுதே, அதுவா ?
'நாராசமான கவிதை, சொல்லவா' என்றதும் காது அடைத்துக்கொண்டு 'ஜொல்லு' என்பாயே, அதுவா ?
அழைத்தவுடன் வருகிறாய், உதவக் கேட்டால் உடனே செய்கிறாயே, அதுவா ?
கொஞ்சமாய்ப் பேசுகிறாய், ஒரு சின்னச் சிரிப்புடன் எப்பழதும் வளைய வருகிறாயே, அதுவா ?
ஏதோ ஒன்று ...
*எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று*

203. நேற்று அப்படியானதே, இன்று என்னாகும் என்ற சிந்தனை;
'எசககுபிசகாய் ஏதும் ஆகாதே' நப்பாசையோடு அச்சம் எழும்.
எல்லா நாளும் சலங்கை சத்தம் தொடர்ந்து  ஒலிக்கும் ... ஜல்.
சிலநாள்...இருளில்...கூட்டத்தின் இடையே தேடியலைவேன் ... ஜல்.
சிலநாளோ தேடத்தேவையேயின்றி எதிரில் நின்று சிரிப்பாய் ... ஜல்.
புடவையில் நான் ...ஜல்... இடையில் கோலம் வரையும் நீ ...ஜல்... அடுத்த இலக்காய் ~வயிறு நோக்கி நகரும்~
புல்மேல் நீ, மடியில் நான், பரவும் இருள், விலகும் நாணம் ...ஜல்.
சிலசமயம் எனை தொட நீ துரத்த இருளில் நான் விரைய ...ஜல்.
~படுக்கையில் என் மேல் புரளும் நீ ... ஆடையின் தேவையின்றி~
பகலில் நீ காக்கும் கண்ணியத்தை இரவில் காற்றில் பறக்க விடுமென்
*ரகசியக் கனவுகள் ஜல் ஜல் ஜல்*

202. தினம் உன்னைப் பார்க்க வேண்டும்.
உன்னோடு பேசிச் சிரிக்க வேண்டும்.
காதல் ரசம் சொட்டும் கவிதைகளை காதில் நீ சொல்ல வேண்டும்.
நாணத்தோடு நான் அவற்றைக் கேட்டு ரசிக்க வேண்டும்.
விரலிணைத்து வீதியுலா செல்ல வேண்டும்.
பார்க்குமெல்லாவற்றையும் கேட்க, நான் கேட்குமெல்லாவற்றையும் நீ வாங்கித் தர வேண்டும்.
எல்லாப்பொழுதும் என் மேல் உன் வாசம் வேண்டும்.
நீ இல்லாப்பொழுதே இல்லாதிருக்க வேண்டும்.
அன்பு காதல் காமம் என்றும் நம்மோடு  கலந்திருக்கவேண்டும்.
என் உடல் சிலிர்க்க உன்னோடு கூடி மகிழ  வேண்டும்.
அவ்வமயம் *அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்*

Monday, June 11, 2018

பொன்மாலைப் பொழுதில் 26

201. வெள்ளைத் தாளில் கவிதை போன்ற ஏதோவொன்றை எழுதினேன்.
உன் சொற்படி வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டேன்.
வெள்ளைக் காரனாய்த் தெரிகிறேன் என்று சொன்னபோது சிரித்து நகர்ந்தேன்.
வெள்ளை நிறத்தில் ஒரு வாகனம் வாங்க முடிவெடுத்தேன்.
வெள்ளைப் பூசணி விரும்பித் தின்பேன்.
வெள்ளைப் பூண்டு உனக்குப் பிடிக்காததால் உண்ணாது தவிர்க்கிறேன்.
வெள்ளை யானையைக் காண ஆவலாய்  இருக்குது.
எல்லா வரியிலும் வெள்ளை வர கனவு மட்டும் கருப்பாகவா வரும் ?
மனதில் *வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது*

200. தொடி அணிந்தத் தோகையே,
கயல் விழிக் கண்களால் எனைக் கவர்ந்தக் காரிகையே.
களிரு போல் தெரிந்தேன், கட்டுப்பாடின்றித் திரிந்தேன்.
என்றுனைக் கண்டேனோ அன்றே நானுன் மேல் மையல் கொண்டேன்.
என் உள்ளத்தின் உள்ளே உள்ள உருவம் உன்னதுதானடி உயிரே.
உன் கருங்கூந்தலின் ஆட்டத்திற்கு இணையாய்க் கவி பாடவா ?
உன் பொற்பாதச் சிலம்பொலிக்கு ஜதி சொல்லவா ?
எந்த விதத்தில் உனைக் கவர ? சொல்லிடு வா.
நழுவுகிறாயே, பசலை பயமா ? நாணமா? கோபமா?
இன்னும் நாம் பேசவேயில்லையே, ஊடலெதற்கு உயிரே ?
நில்லாயொரு நாளிகை, நங்கையே
*நறுமுகையே நறுமுகையே*

199. அவனுக்குப் பிடித்த நீல நிறத்தில் புடவை அணிந்துக் கொண்டேன்.
குந்தவையைக் காணப் பயணித்த  வந்தியத்தேவன் பழைய கதை.
மன்னவனைக் காண மங்கை நான் பயணிப்பது புதிய கதை.
எனைக் கண்டதும் ஆச்சரியத்தை மறைத்தபடி கோபத்தில் குதிப்பான்.
பயப்படுவதாய் நடிக்க குலைவான்.
மல்லிகை மணத்தில் மயங்குவான்.
வெட்கிக் சிரிக்கக் கிறங்குவான்.
மடியிலெனைக் கிடத்திக் கவிதை மழை பொழிந்திடுவான்.
இந்த எண்ணங்களெல்லாம் எனை அவனைநோக்கி நகர்த்துகின்றன.
ஒரு முடிவோடு கிளம்பிட்டேன்.
இனி யார் சொல் பேச்சும் கேளேன்.
*என் ஆளை பாக்கப் போறேன்*.

198. இதுவரை இத்தனை விஷயங்கள் எனைச் சுற்றியிருப்பதை உணர்ந்ததில்லை.
உன்னோடுப் பழகிய பின்பு தான் எல்லாம் ரசிக்க எண்ணம் ஏற்படுது.
பரந்து விரிந்த புல்வெளியில் நடந்திடப் புத்துணர்ச்சி பிறக்குது.
புல்லின்மேல் பனி இட்டப் பொட்டு எனை வியப்பிலாழ்த்துது.
பல வண்ணங்களில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பரவசமளிக்குது.
படபடவென்று பறக்குமிந்தப் பட்டாம்பூச்சி ரம்மியமாய்த் தோன்றுது.
கீச்சு கீச்சென்றுக் கூவுமிந்தப் பறவைகளின் இன்னிசை அனுபவித்தறியாதது.
இத்தனையேன் என்னைய மெல்ல வருடும் இந்தப் *பூங்காற்று புதிதானது*

197.
_16 வயதினிலே_யே பழுத்து, பலமுறை ரசிக்க வைத்த மயிலு நீ.
ஏய் சிகப்பு ரோஜாவே, நாங்கள் தேடியக் கைகுட்டை விற்றவள் நீ.
'சீனு சீனு' என்று நீ கொஞ்சி நடித்த _மூன்றாம் பிறை_ பார்க்காதார் இலை, இருந்தால் அது அவர் பிழை.
வசதியாய் வாழ்ந்து _ஜானி_யோடு என் வானிலே ... பாடினாய் நீ, _வறுமையின் நிறம் சிவப்பு_ என்று வாழ்ந்தாய் நீ.
_வாழ்வு மாயம்_ என்றுப் புரிய வைத்தாய் நீ.
_மூன்று முடிச்சோ_ முப்பது முடிச்சோ எங்கள் முதல் கனவுக்கன்னி நீ.
யாருக்கும் _நான் அடிமை இல்லை_ என்றெண்ணும் _போக்கிரி ராஜா_வையும் _கல்யாணராமனா_ய் மாற்றக்கூடியவள் நீ.
எங்கள் _தர்மயுத்த_த்தின் _குரு_ நீ.
கலையுலகின் _அடுத்த வாரிசா_ய் வலம் வந்தக் _கவிக்குயில்_ நீ.
அடி _கோகிலா_, சொல்ல வெட்கினும்
*சின்னஞ் சிறு வயதில் ...*

196. அடக்கமாய்த் தான் இருப்பேன்
நெஞ்சை இறுக்கிப் பிடித்து தான் வைத்திருந்தேன்.
என்று உனைப் பார்த்தேனே அன்றே எனை நான் மறந்தேன்.
அதெப்படி பார்த்ததும் பற்றும் என்றுப் பலரை  பகடி செய்ததுண்டு.
பாவி, பாவை நெஞ்சுள் புகுந்து பித்து பிடிக்க வைத்திட்டாய்.
அய்யகோ என்னையும் கவிதை மொழியில் சிந்திக்க வைத்திட்டாய்.
இனியெதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் புரிகிறது.
என் வசம் ஏதுவுமில்லை என்பதைத் தவிர வேறெதுவும் புரியவில்லை.
சரியென்று சொல்லிவிடவா ?
இன்னும் கொஞ்சம் பழகவா ?
அருகில் சென்றுப் பேசவா ?
*அம்..மாடி அம்மாடி ... நெருங்கி ஒருதரம் பார்க்கவா ?*

195. நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருக்கிறேன்
நாம் இணையவுமில்லை பிரியவுமில்லை.
நம் ஊடல் முடியப் போவதுமில்லை.
அதனாலென்ன ?
காதல் கசந்திடுமா இல்லை கன்னி முகந்தான் வெறுத்திடுமா ?
காணுமெல்லாவற்றிலும் உனை இணைத்துப் பார்க்க முடிகிறதே.
சிரிக்கும் குழந்தையும் பூத்துக் குலுங்கும் பூவும் உன்னை ஞாபகப்படுத்துகிறது.
மெல்லிசை கேட்கையில் மடியில் நீ படுத்திருப்பதாய் மனதுள் படுகிறது.
பொட்டு பூ புடவையில் யாரைப் பார்த்தாலும் உன் பெயர் சொல்லி அழைக்கத் தோன்றுகிறது.
இதோ *அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது*

Monday, June 4, 2018

பொன்மாலைப் பொழுதில் 25

194. அழகு கண்டிருக்கிறேன்.
அழகுடி நீயென்று பலபேரிடம் பொய்யுரை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் உனைப்போல் ஒருத்தியை இதுவரை கண்டதில்லை,
இப்படி வியந்து நின்றதில்லை.
*
பாற்கடலிலிருந்து பரிமாறப்படும் பாலில் பாவை நீ நீராடுவாயோ  ? கும்குமப்பூவிலிருந்து குதித்திருப்பாயோ ?
இத்தனை சிவப்பா, அடடடடா.
மின்னல் கீற்றாய், பார்த்ததும் பளிச்சிடும் சிற்றிடை.
மெல்லிய தேகம், செயலில் வேகம்
அடர்ந்தக் கூந்தல், காந்தக் கண்கள்,
கண்ணிய உடை தரை பார்த்த நடை
மொத்தத்தில் மண்ணுலகில் மிதக்கும் தேவலோக மங்கை
*
இத்தனை அழகு என்றால் யாருக்குப் பிடிக்காது போகும்?
வீதியெல்லாம் உனை ரசிக்குது.
உனக்குத் தெரியுமா ?
இந்த *ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா ?*

193. எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து சில நொடிகள் சிரித்து விடுகிறேன்.
எனை வசீகரிக்க நீ செய்தவைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிறேன்.
எனைச் சுற்றிச்சுற்றி வந்து நீ பேசிப் பழகியதில் பெருமை கொள்கிறேன்.
உன் சேட்டைகளையும் லீலைகளையும் மறக்காது நினைத்து மகிழ்கிறேன்.
உன்னோடு இன்னும் கொஞ்சம் நாட்கள் சேர்ந்திருக்க எண்ணி ஏங்குகிறேன்.
இடையூறுகள் இருந்தும் உனை எண்ணாத நாளில்லை என்பதை ஏற்கிறேன்.
இருக்கும் வரையிலும் உன் நினைவு இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

192. காதினில் வைரக் கடுக்கண், கப்பலில் வந்ததாம்.
நீலநிற நெத்திச்சுட்டி என் தேகநலம் காத்திடவாம்.
பாண்டியநாட்டில் பயணிக்கையில் கிட்டியதாம் இச் சந்திரப்பிறை.
*
அரசகுடும்பத்தார் அணியும் அட்டிகையும் ஆரமும் அன்புப் பரிசு.
சிலம்பின் சிவப்புக் கல்லில் என் சிரித்த முகம் தெரிகிறதாம், நல்ல கதை.
*
என் சொல் கேளாது மாட்டிவிட்டது இந்த ஒட்டியானம்.
என் இடை பெருக்கவைக்க அவர் நெஞ்சில்  திட்டமிருக்கும் ?
*
இத்தனையும் ஏதென்றா கேட்கிறாய்,
அடி என் கிறுக்கு,
எனை இத்தனை நாள்
சிந்தையில் சித்ரவதை செய்த என்...
தூர நின்றுத் துயரம் தந்த என்...
யாருக்காகக் காத்திருந்தேனோ அம்
*மன்னவன் வந்தானடி தோழி*

191. அனலிலிருந்து அவதரித்து
ஆறுகமலங்களில் வந்தமர்ந்து
ஆறுமுகனென்றப் பெயர் பெற்று
அசகாயசூரனாய் வளர்ந்து
அரிய பழம் கேட்டு ஆத்திரமடைந்து
அரையாடையோடு அகம் துறந்து
ஆவினன்குடியில் வந்து நின்று
அன்னை சொல்ல சமாதானமாகி
அவ்வையின் அகந்தையழித்து
அரக்கனோடு போரிட்டு வென்று
அப்பாவம் நீங்க அப்பனை வேண்டி
அலைகடலருகில் நின்றருள்புரியும்
ஆண்டவா செந்தில் நாதா
அபயமளித்துக் காத்திடைய்யா
அப்பா *சரவணபவ குக வடிவழகா*

190. சிரிக்கிறாய், மனம் துள்ளிக் குதிக்கிறது.
காதினுள் கதைக்கிறாய், நெஞ்சில் கவிதை நிறைந்து வழிகிறது.
இரு புருவத்தையும் மாற்றி மாற்றி நீ ஏற்றி இறக்க, அதிசயிக்கிறேன்.
கண்ணடித்து உன் உதடுகளை இறுக்கி மூடித் தலையாட்ட, ஆனந்தமடைகிறேன்.
வேகமாய் அருகில் வந்து எனை முகரவைத்து முத்தமிட்டு பரவசத்திலாழ்த்துகிறாய்.
பெண்ணாகவும் ஆணாகவும் நமைப்படைத்த ஆண்டவனுக்கு நன்றி நவில்கிறேன்.
அழகு அறிவு என்ற இரு சொல்லுக்கு ஒரேப் பொருளாய்த் திகழும்
*ஏய் மாண்புமிகு மங்கையே*

189. கடவுளருள் நிறைய கிட்டிடவே
நற்சிந்தனைகள் நெஞ்சில் நிறைகவே
நீ நினைப்பதெல்லாம் நடந்திடவே
தொட்டதெல்லாம் துலங்கிடவே
சொல்வதெல்லாம் பழித்திடவே
நீயிருக்குமிடமெல்லாம் செழிக்கவே
உன்பாதம்பட்ட இடமெல்லாம் பொழிவுறவே
உன்னாலெல்லாரும் வளம் நலம் பெறவே
என்றும் நீ நலமாய் வாழ்க வாழ்கவே
*கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே*


188. காற்றில் கலையாக் கூந்தல்
கவிதை சுரக்காக் காதல்
*
வாசம் வீசாப் பூக்கள்
நிறைந்து வழியும் நதிகள்
*
நிலத்தில் நீந்தும் மீன்
சுவைக்கப் புளிக்கும் தேன்
*
நீரின் மேல் நடனம்
காலால் ஆடும் கரகம்
*
படுத்ததும் உறங்கும் பணக்காரர்
மனைவிக்கு அஞ்சாக் கணவர்
*
கவிதைக்குக் கிட்டும் பாராட்டு
*குழந்தை பாடும் தாலாட்டு*
*

187. கண்கள் பேசும் மொழி பார்த்து பார்த்துக் கற்றுக்கொண்டேன்.
கவிதைகள் தானே சுரப்பதால் அதிலெந்தப் பிரச்சனையுமில்லை.
அடிக்கடி ஏதாவது குளறுபடி செய்து சிரிக்கவைத்து, தினமொருமுறை லவ்யூ சொல்லி இதுவே பாலபாடம்.
வேறெந்தப் பாவை மீதும் பார்வை படரக்கூடாதென்பது காதல் வேதம்.
விரல் நீட்டி விளையாடும் சேட்டைகள் பழகவில்லை இன்னும்.
இதழில் கதை எழுத வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை.
சம்மதமெனில் சீதாராமனாய் இல்லையேல் கோபிகிருஷ்ணனாய்
*காதலெனும் தேர்வெழுதிக் காத்திருக்கும் மாணவன் நான்*

Wednesday, May 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 24

186. படைப்பவன் நானே
பசிக்க, அழ வைப்பவன் நானே
பால் நானே, பால் தருபவள் நானே
பாவங்கள் நானே, பாவம் செய்யப்
பாதை வகுத்துத் தருபவன் நானே
பாவத்திற்குத் தண்டனை தந்துப் பாடம் புகட்டுபவன் நானே
பாதம் பணிந்தார்க்குப் பரிகாரம், பாபவிமோசனம் எல்லாம் நானே
பாரபட்சம் பாராது பாருலகைப் பாதுகாப்பவன் நானே
பந்தம் நானே, பகையும் நானே
பரந்து விரிந்த வானம் நானே
பருக வானம் தரும் பானம் நானே
பரவசம் தரும் பண்ணிசை நானே
பாடவைப்பவன் நானே
பாடப்படும் அந்தப் *பாட்டும் நானே, bபாவமும் நானே*

^பாவம் - bavam - expression

185. பூ சூடி, பொட்டிட்டு, புன்னகை புரிந்தபடியே வலம் வருவேன்.
தவறாய் யாரும் பார்க்க முடியாது நடந்து கொள்வேன்.
அப்படி நடக்க ஆரும் நினைத்தால் தடையிடத் தயங்கேன்.
ஆசையெதுவும் நெஞ்சில் நுழையாது வளர்ந்து வந்தேன்.
ஒருமுறை தானே பார்த்தோம்,
ஓரிரு வார்த்தை பேசினோம்.
இதுதான் ஜென்ம பந்தம் என்பதா ? தொடருதோ ?
இதுவரை இப்படி நடந்ததில்லையே.
ஏன் என்றெனக்குப் புரிந்தும் நம்ப முடியாது தவிக்கிறேனே.
உங்கள் ஒரு்சிறுப் பார்வையில், புன்சிரிப்பில் மெல்ல கரைகிறேனே
*துளி துளியாய், பனித்துளியாய்*.

184. சொன்னால் செய்கிறாய் நீ
சொன்னபடியே செய்கிறாய் நீ
என் எண்ணப்படி இசைகிறாய் நீ
கனவின் உருவாய்,கதைக் கருவாய் கவிதைப் பொருளாய் எல்லாம் நீ
நீயில்லாதிடமேயில்லை என்பதாய் எல்லாவிடத்திலும் என்னோடு நீ  தேவலோகத்து மங்கையர் போல் நர்த்தனமாடுவதிலும் நிபுணி நீ
இன்று இத்தினம் என்னோடு இணைந்துப் பாட வா நீ
இரவிலும் கனவிலும் பாட வா நீ
எல்லா ராகமும் நீயறிந்த போதிடினும் என்னோடு பாடு நீ *கீரவாணி*


183. பிள்ளையாரப்பா
கயிலைமலையானே
தினமொருக் கவிதை புனையக் கருணை புரியும் கனல்விழியானே
மாதொருபாகனாய் நின்றென் மனங்கவர்ந்த மகாதேவா,
பாதம் பற்றினார்ப் பாவம் போக்கும் பரமேஷ்வரா,
நினை நினையாத நாளில்லை நீலகண்டா,
திருவிளையாடல் பலபுரிந்த தியாகேசா,
தில்லை நடராஜா,
பிள்ளையின் பிழையெதுவாயினும் பொருத்தருளும் தாயுமானவா,
தயை புரிந்திடு வா.
சங்கரா, சாம்ப சதாசிவா,
சம்போ சிவசம்போ
இக்கணமே வந்து சக்தி தந்து விட்டுப்போ
*சக்தி கொடு*


182. பஞ்சகச்சத்தில் நான்
மடிசாரில் நீ
ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறேன்
மடியினில் படர்ந்திருக்கிறாய்
வெற்றிலை நான் போட
உன் வாய் சிவப்பேற
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

கால் கொலுசை நீ சப்திக்க
அர்த்தம் புரிந்து நான் முத்தமிட
கண்ணால் நீ கெஞ்ச
நான் காலமுக்கிவிட
ஆரிராரிரோரோ என நீ இழுக்க
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

அருகில் வந்து முறைக்கும் நீ
அலட்டாது அமர்ந்திருக்கும் நான்
'அறிவில்லை' என்கிறாய் நீ
காதில் கொள்ளாது நான்
குளிக்கப்போகிறாய் நீ
சரி போ என்றபடி நான்
'துண்டு ப்ளீஸ்' கேட்கிறாய் நீ
துண்டோடு கதவு தள்ளும் நான்
என் துண்டை உருவும் நீ
பிறந்த மேனியாய் நாம்
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

*சம்போ சம்போ சம்போ சம்போ*




181. ஏன் இத்தனை சந்தோஷம் என்றா கேட்கிறாய், என்னுயிர்த் தோழா,
எதைச் சொல்ல எதை மறைக்க என்ற குழப்பமிருந்திடினும் எல்லாம் சொல்கிறேன் கேளடா.
*
நேற்றவள் நேரில் வந்தாள்,
தென்றலாய், மழைச்சாரலாய், இளவெயிலாய், புதுப் புனலாய்,
மாலையில் நீல நிறச் சேலையில்,
கண்ணில் மையோடு,
வாயில் புன்னகையோடு
நெஞ்சில் காதலோடு.
அவள் கூந்தல் மணத்தை நுகர்ந்து மல்லிகைப்பூ மணம் வீச;
*
நிறையப் பேசினாள்.
காத்திருக்கக் கேட்டுக்கொண்டாள்.
தமக்கையின் திருமணம் தந்தையின் சில கடமை முடிய வேண்டுமென்றாள்.
என்னைச் சிநேகிக்க ஏழெட்டுக் காரணங்கள் எடுத்துரைத்தாள்.
அதையும் தொடர்ந்து, முத்தமழை பொழிந்து காதினுள் மெல்லச் சொன்னாள்
*கொஞ்ச நாள் பொறு தலைவா*

180. மெல்லப் பேசி புன்னகைத்து நலம் கேட்டதன் பொருள் அறிவேன்.
உபத்திரவமில்லாது ஓடியோடி உதவி செய்ததன் உள்ளர்த்தம் அறிவேன்.
கலங்கி நின்ற கணத்தில் கைதூக்கி விட்டதன் காரணம் அறிவேன்.
மாணிக்கவாசகம் பாடி மனபாரம் குறைய  மார்க்கம் காட்டியதன் மாண்பு அறிவேன்.
ஒருகுறிப்பும் உணர்த்தாது கன்னி நெஞ்சைக் களவாடியது மட்டும் அறியேன்.
காரணம் சொல்வீரா ...
*கள்வரே ... கள்வரே*


179. உழைத்து உழைத்து மனம் உடல் களைத்துவிட்டேன்.
பணம் தேடிப் பல பயணம் செய்து ஓய்ந்துவிட்டேன்.
பணமே வாழ்க்கை என்றெண்ணி இருந்துவிட்டேன்.
பலதும் பெற்றும் போதுமென்று எண்ணாது நெஞ்சமின்னும் அல்லாடுது.
வாழ மறந்த வாழ்க்கை விழி முன் வந்து நின்று பழித்துக்காட்டுது.
பெற்றதையும் இழந்ததையும் நிறுத்திப் பார்த்தால் என்ன கிழித்தோமென்று கோபம் வருகிறது.
எந்த திசையிலும் நகர முடியாது வாழ்க்கை கட்டுண்டுக் கிடக்கிறது.
அலையினிடையில் அகப்பட்ட படகு, கரைசேர  துடுப்பைத் தேடுகிறது.
தாமரை இலைமேல் தண்ணீராய் பற்றற்று வாழ மனம் விரும்புகிறது.
இதோ உன் வாசல் வந்துவிட்டேன்
துணை நீயம்மா, வழிகாட்டம்மா.
*நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா*

Tuesday, May 15, 2018

பொன்மாலைப் பொழுதில் 23

178. மயிற்பீலி சூடிய மாதவா
மங்கையென் மடியில் மயங்கிடவா
   ஆராரோ ஆராரோ

கார்மேகவண்ணா கமலநயனா
கன்னியருகில் கண்ணுறங்கிட வா
   ஆராரோ ஆராரோ

புல்லாங்குழலூதும் புருஷோத்தமா
பூமெத்தையில் பள்ளி கொள்ள வா
   ஆராரோ ஆராரோ

நர்த்தனமாடிய நந்தகுமாரா
நல்லுறக்கம் கொள்ள நீ மெல்ல வா
   ஆராரோ ஆராரோ

சங்கடம் தீர்க்கும் சியாமள வர்ணா
சயனம் கொள்ள சடுதியில் வா
   ஆராரோ ஆராரோ

பண்டரிநாதா பாண்டுரங்கா
பிரபஞ்சம் மறந்து உறங்கிட வா
    ஆராரோ ஆராரோ

*ஆராரோ ஆராரோ*
*நீ வேறோ நான் வேறோ*

*****

177. உணவு பசியின் புன்னகை
கனவு ஆசையின் புன்னகை
வெற்றி உழைப்பின் புன்னகை
தோல்வி சோம்பலின் புன்னகை
கவிதை காதலின் புன்னகை
குழந்தை காமத்தின் புன்னகை
ஆத்திரம் அதிகாரத்தின் புன்னகை
அழிவு ஆணவத்தின் புன்னகை
 *பூ கொடியின் புன்னகை*
*அலை நதியின் புன்னகை*

*****

176. நல்லோர் நலமாய் இருக்கணும்
நலிந்தோர் வாழ்வு மேம்படணும்
காலத்தில் மழை பொழியணும்
வயல் செழித்து நிறையணும்
தினம் வயிறு பசிக்கணும்
பசிக்கையில் உணவு கிட்டணும்
படுத்தவுடன் உறக்கம் வரணும்
நற்சிந்தனை நெஞ்சில் நிறையணும்
கடவுளெம் கூடயிருந்துக் காக்கணும்
கற்ற கல்வி கைகொடுத்திடணும்
அருள் புரி தாயே, எம் துணை நீயே
*கலைவாணியே*

*****

175. நீல நிலா என்றனர்.
நின்றவிடத்திலிருந்தே நிமிர்ந்து நோக்கினர்.
பால்கனியிலிருந்தும் பாலத்தின் மேலிருந்தும் பார்த்து ரசித்தனர்.
*
பலரும் பார்க்கப் பால்நிலா சிவந்து போனது.
வெட்கத்திலா, கோபத்திலா என்று புரியாமல் போனது.
*
கொஞ்சமாய்த் தெரியக் கூச்சலிட்டனர் சிலர்.
தானிருக்குமிடத்தில் தெரியவில்லை எனக் கவலை கொண்டனர் சிலர்.
நல்லாத் தெரியுதென்று ~நானே நிலாவென்றும்~ நடனமாடினர் சிலர்.
பார்க்காதார் பார்த்து மகிழப் படமெடுத்தனர் பலர்.
*
ஓட்டு போட்டு நாட்டை மறப்பது போல்
க்ரகத்திலிருந்து க்ரகணத்தை பார்த்து ரசித்து மறந்திட்டோம்.
ஆனால் .... இன்றும் ... வானில்
*நிலா காய்கிறது*
*நேரம் தேய்கிறது*
*யாரும் ரசிக்கவில்லையே ...*

*****

174. மின்னஞ்சலில் நலம் விசாரித்தாய், நவின்றேன்.
குறுஞ்செய்தியில் வணக்கம் சொல்ல வாழ்த்தினேன்
அலைபேசியில் அழைத்தப்பொழுது ஆர்வமாய் அலவாடினேன்.
கனவினில் கவிதை கேட்க வர்ணித்து உளறினேன்.
இத்தனையும் தொடர்ந்து
நேரில் வந்து நின்று இன்பத்திலாழ்த்துவாய் என்று எந்நாளும் எண்ணியதில்லை.
*ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ?*

*****

173. எது பிடித்திருக்கு என்றால் ...
கன்னக்குழி விழ நீ சிரிக்கும்போது
பேசிவிட்டு நா கடித்துக் கொள்ளும்போது
குறுகுறுவென்று நான் பார்ப்பதையுணர்ந்து இழுத்து மறைத்து எனை முறைக்கும்போது
பார்க்காதிருந்தால் இருமி கவனம் கவரும்போது
பார்வை மோதையில் நாக்கை நீட்டி லலலல வெனும்போது
கொலுசோசை கேட்டு அருகில் செல்ல காதினுள் முத்தமிட்டு கண்ணடிக்கும்போது
புத்தாடையில் எதிரில் நின்று 'எப்படி' என்கையில்  'அ...பாரம்' என்றவுடன் சட்டென்று கை கட்டிக்கொள்ளும்போது,
கவிதை நல்லாருக்கு, அர்த்தமென்ன என மெல்லக் கேட்கும்போது.
யாருமில்லாப் பொழுதில் மடியில் படுத்துக் கொண்டு மருதாணியிடக் கெஞ்சியபோது
*சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது*

*****

172. இப்பத்தான் கண்டுகிட மாட்டேங்கறீங்க
ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க
அதெல்லா ஒரு காலம்ங்க, அப்போ...
மொதமுறை பார்த்தப்ப மொறச்சீங்க
அடுத்தமுறை பாக்காதமாதிரி நடிச்சீங்க
பின்னால ஒருநா மொல்ல சிரிச்சீங்க
பேரு என்ன ன்னு கேட்டீங்க
பழகப் பழக மனசுக்குப் பிடிச்சிப் போனிங்க
நெறைய எனக்கு சொல்லித்தந்திங்க
தெரிந்தத நாசொன்னா கேட்டுக்குவீங்க
நல்லப் பாடலை மொல்லப் பாடுவீங்க
சிரிச்சி சிரிக்கவச்சி சிந்திக்கவைப்பீங்க
வேஷம் போடாத வெளிப்படையா பேசி நேசத்த நெஞ்சில விதைச்சீங்க
ஆன்மீக அரசியல் மாதிரி கண்ணியமான காதலை கண்ணுல காட்டுணீங்க
இன்னும் சொல்லனும்னா ... அப்போல்லா எனையே *சுத்தி சுத்தி வந்தீக*

*****

171. உன்னிடமிருந்தோர் குறுஞ்செய்தி வந்ததும்
உள்ளம் உவகை கொள்வது ஏனோ ?
நீ அருகிலிருக்கையில்
அகத்திலோர் ஆனந்தம் பிறப்பது எங்ஙனம் ?
பார்த்ததும் புன்சிரிப்பும்
பார்க்கும் வரை பரிதவிப்பும் ஏற்படுவது எதனால்?
உன் குறுகுறுப்பார்வை
விறுவிறுவென்று ஓர் உணர்ச்சி உண்டாக்குவதேன் ?
உன் ஒவ்வொரு வாசகமும்
திருவாசகமாய்த் தித்திப்பதன் காரணம் சொல்லேன் ?
என் *மனசுக்குள் ஒரு புயல்  மையம் கொண்டதே, அதன் பெயர் தான் என்ன ?*

*****

Wednesday, May 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 22

170. உனை எண்ணாத நாளெல்லாம்
நான் எனை மறந்து வாழ்ந்த நாட்களே.
உன் விழியீர்ப்பு விசையிலிருந்து விலகியிருந்த நாட்களெல்லாம்
வீணாய்ப்  பொழுது போக்கிய நாட்களே.
உன் புகழ் பேசா நிமிடங்களெல்லாம்
என் நா அசையா நிமிடங்களே.
கனவில் நீ காட்சி தரா
இரவெல்லாம் நான் உறங்காதிருந்த இரவுகளே.
கருப்பொருளாய் நீ இல்லாவிடில்
என் கவிதைகள் வெறும் வார்த்தைகளே.
*உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே*

*****

169. அழகின் உருவம் அன்பின் வடிவம்
சிந்தை கவரும் செம்பொன் சிலை
நினைவலைகளில் நின்றாடும் நுரை
லயம் தவறாது நர்த்தனமாடும் மயில்
சுரம் பிசகாது கூவித்திரியும் குயில்
விடிகாலை வெயில்
மெல்ல வீசும் தென்றல்
~அமுத~கவிதைசுரபி சாந்தஸ்வரூபி
சிற்றிடை மோகினி
செவ்விதழ்க் காமினி
இரவில் கனவில், பகலில் எதிரில்  காட்சிதரும் கன்னி நீ,
என்னுயிரே, நிழலே, எழிலே
*மணியே, மணிக்குயிலே, மாலையிளங் கதிரழகே*

*****

168. கோவில்ல வச்சிப் பார்த்தானாம் ஒருநாள்
பார்த்ததும் பிடிச்சிப் போயிடிச்சாம்.
குளத்தாங்கரையில் பார்த்தானாம்,
குளிக்கரச்ச பார்த்திருப்பானோ ? களவானிப்பய.
பரவால்ல, பார்க்க சுமாராயிருக்காப்ல,
அமைதியாய் இருக்கா அலட்டாது பேசுறா
வாலி வைரமுத்து கணக்கா கவிதை சொல்றா
கண்களை இங்க அங்க மேயவுடாது கண்ணியமாப் பாக்குறா.
பயபுள்ள, என் நெஞ்சைக் களவாடிட்டானே,
மனசு இப்டி இறக்கை கட்டுன மாறிப் பறக்குதே
*அடி ஆத்தாடி ...*

*****

167. புடவையில் பவனி வரும் தெய்வீகம்
பார்வையில் தெரியும் சாத்வீகம்
பார்க்கப் பார்க்க நெஞ்சில் பரவசம்
பழகினால் புரியும் கம்பீரம்
பேசும் பாஷையில் வீசும் பரிமளம்
கருணை பிரதானம்
பகட்டில்லா யவ்வனம்
புரவியின் வேகம்
புவியின் நிதானம்
நடக்கும் போதி மரம்
நமக்குக் கிடைத்த வரம்
பட்டுப்போன்ற பாதம்
பாவை சொல்வதெல்லாம் வேதம்
*
மண்ணிலுன்னைப் போலே
இன்னொருத்தி இல்லையே,
*ஏய் மாண்புமிகு மங்கையே ....*

*****

166. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு மதிப்பு மரியாதை
உன்னைப் பார்க்கையில் மட்டும் தான் ஈர்ப்பு ஆசை  எல்லாம்

இரக்கம் நெஞ்சில் ஏராளம் தாராளம்
நீ அருகிலிருந்தாலோ கிறக்கம் நெருக்கம் இறுக்கம் எல்லாம் இருக்கும்

எந்த உடையின் நிறத்தையும் பகுத்துரைக்கும் திறமையிருக்கு.
நீ எதிரில் நின்று கேட்கையில் மேனி நிறம் மட்டுமே தெரிய முழிக்கவேண்டியிருக்கு.

நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்
*உண்மை சொன்னால் ... நேசிப்பாயா ?*

*****

165. உன் ஒருசிறுப்பார்வையில்
காதல் செடி முளைக்கத் தொடங்கிய நேரம்
கவலைகள் எனைவிட்டுக் காதாதூரம்
விலகி நின்ற நேரம்
நெஞ்சிலிருந்த பாரம் இலவம்பஞ்சாய் மாறிப்
பறந்து மறைந்த நேரம்
கண்ணனும் ராதையும் கண்முன் வந்து நின்றுக்
காதல் பாடம் கற்பிக்கும் நேரம்
வானின்தேவதைகள் பக்கம் வந்து நலம் விசாரித்து
வரம் தரும் நேரம்
முகிலாய் மாறி நான் வானில்
மிதக்க ஆரம்பித்த நேரம்
*தொடுதொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்*

*****

164. ஏறெடுத்துப் பாக்கலேன்னா ...
எப்படி இருக்கியன்னு தெரியாமயாப்போவும் ?
போறச்சே வாரச்சே சிரிக்கலையின்னா ...
கவனிக்கலேன்னு சொல்வியலா ?
பதில் தரலேன்னா ... பிடிக்கலையோன்னு ஏன் சந்தேகப்படணு ?
ஏடி வாடி போடின்னு சொல்லும்யா,
இங்கனகுள்ள அங்கனகுள்ள சுத்தும்யா
தவிக்கவுட்டு சோலிபாக்க தூரப் போறேன்னு
சொல்லுதியளே நாயமா?
செத்த நேரம் இங்க கிட்ட வாரும்
இந்தக் கிறுக்குப் ~பொட்டச்~ மொல்லச் சொல்றத
செவில்ல போடும்
மக்கா ஒமக்காவ இம்பட காத்து நிப்பே
ஏமாத்திப்போட்டு போயிடாதிய, சரியா
என் சுவாசமா நெனச்சிருக்கே
நேசமானவரே
*நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*

*****

163. வானவில் உன் புருவம்
போலிருக்காவெனச் சோதிப்பேன்.
வண்ணத்துப்பூச்சியில்
உன் தாவணி வர்ணத்தைத் தேடிப்பார்ப்பேன்.
கூட்டத்தில் உன் பார்வை தென்படுதா
என்று தேடித்தோற்பேன்.
பாராட்டுக்களில் உன் பெயர் இல்லாதது கண்டு ஏமாறுவேன்.
*பூக்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாக தேடிப்பார்த்தேன்.*

*****

162. வாய் விரிக்காது விரல் வருடி நகத்தால் கீறி
விடயமறிந்துக்கொள்வது அடுத்து நிகழும்.
இடை இழுத்து இதழ் இணைத்து
இறுக்கிக்கொள்வது இன்னொரு தினம்.
உடை பாரம் என்றுணர்ந்து, தவிர்த்து
உயிர் மாற்றிக்கொள்வது பின் நிகழும் சம்பவம்.
இன்று இங்கு இப்பொழுது இவ்வமயம்
ஆரம்பநிலையின் அடுத்தக்கட்டம்.
என்னுள் பாதி நீயாகும் விதம்
உன்னுள் நான் ஒன்றாகும் விதம் ஒரு வார்த்தை சொல்லு நீ,
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி*

*****

161. வஞ்சி உறங்குகிறாள்
சாய்ந்தபடியே சகி சயனிக்கிறாள்
கனவுகள் கண்டபடி கண்மூடியிருக்கிறாள்
துயரங்களை மறந்துத் தோகை துயில்கிறாள்
நயனங்களை இழுத்து மூடி நங்கை நல்லுறக்கத்தில் இருக்கிறாள்.
வெண்ணிலவே நீ வேறு திசை விரைந்து உன் ஒளி பொழி
இடியோ மழையோ இரண்டும் இந்தப் பக்கம் வராதிரு.
பொன்மாலைப்பொழுதே மெல்லிசைப் பாடலையே எப்பொழுதும்போல் ஒலி.
*தென்றலே ... தென்றலே மெல்ல நீ வீசு*

*****

Thursday, May 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 21

160. கண்டதும் காதல் பிறந்திட
யாரென்ற ஆர்வம் எழுந்திட
பேசிப்பழகப் பிடித்துப் போகிட
கன்னி மனது கனிந்திட
வாழ்வில் வசந்தம் வீசிட
நாட்கள் நிமிடங்களாய் நகர்ந்திட
நாளும் கனவுகள் மலர்ந்திட
நெஞ்சில் கவிதைகள் சுறந்திட
உறக்கம் வர மறுத்திட
உண்ணாதே பசி பறந்திட
ஊடல் இடையில் புகுந்திட ... டாட்

ஓடியொழிந்தது போதும் நிறுத்திவிடு
சஞ்சலம் வேண்டாம் மறந்துவிடு
என்விழி பார்த்துப் பேசிவிடு
ஒரேயொரு வார்த்தை சொல்லிவிடு
*மந்திரம் சொன்னேன் வந்துவிடு*

*****

159. தினம் உன்னைக் காண ஆசைப்பட்டேன்
நீ என்னோடு பேசிச் சிரித்துப் பழக
ஆசைப்பட்டேன்
நீ ரசிப்பதையெல்லாம்
உன்னோடு சேர்ந்து ரசித்திட ஆசைப்பட்டேன்
காதுக்குள் முத்தமிட
உன் கண்ணுக்குள் வெடிவெடிப்பதைப் பார்க்க ஆசைப்பட்டேன்
உன்னைப்போலொரு குரங்கையும்
என்னைப்போலொரு எழிலையும் ஈன்றெடுக்க ஆசைப்பட்டேன்
என் கட்டழகை உன் கவிதை வரிகள் வர்ணிக்க ஆசைப்பட்டேன்
கட்டுக்கதை பல சொல்லி
என்னோடு நீ காமுற ஆசைப்பட்டேன்
*ஆத்தோரம் தோப்புக்குள்ளே ... ஆசை வச்சேன்*

*****

157. உன் குறுகுறுப் பார்வை
என்னுலொரு கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.
தள்ளி நின்று நீ பார்க்கையில்
அருகில் அழைக்க ஆசையாயிருக்குது.
கிட்டநின்று நீ கண்ணடித்துப் பார்த்தால்
தொட்டுத் தழுவ தேகம் துடிக்குது.
பார்த்துக் கொண்டேயிருக்க பிரியமாய் இருக்குது,
பரவசம் பிறக்குது
பார்க்காது போனால் பாவை நெஞ்சம் பதறுது,
படபடக்குது, பரிதவிக்குது.
இருந்தும் ...  இருந்தும்
*பார்க்காதே  பார்க்காதே ... ஐயையோ பார்க்காதே*

*****

156. இப்பொழுதெல்லாம் படங்களின் காதல் காட்சிகளை
கவனமாய் ரசிக்கிறேன்.
சித்திரம் வரைவதிலும் நடனமாடுவதிலும்
ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்கம் புரிகிறது, சிரிப்பும் என் உதட்டைக் கவ்விக்  கொள்கிறது.
அந்த ம் இல் உனக்குக் கோபம் வருமோ என்றெண்ண,
இன்னும் சிரிப்பு வருகிறது.
எங்கும் எதிலும் உன் முகம் தெரிய,
'அப்போ இது அதானே ?' என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் என்ன சொல்ல ?
என்னைக் கேட்காமலேயே,  என்
*இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது மெல்ல*.

*****

155. ஆசை கோபம் விட்டுத்தள்ள
வாழ்வில் வலிகள் இருப்பதில்லை

ஆற்றல் அமைதி அகத்திலிருக்க
வெற்றி விலகிப் போவதில்லை

சிந்தையில் கருணை நிரம்பியிருக்க
செய்கையில் தவறு நேர்வதில்லை

நெஞ்சில் உன்னை எண்ணிக்கொள்ள
கற்பனை வற்றிப் போவதில்லை

*காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை*

*****

154. பேசிச் சிரித்ததுண்டு
ஊடல் கொண்டு ஒதுங்கியிருந்ததுண்டு
இடையணைத்துக்கொண்டு  இணைந்திருந்ததுண்டு
*
இதுவரை செய்யாத ஒன்று இன்று.
உனக்காக ஒரு தாலாட்டு.
தாய் மட்டுந்தான் தாலாட்டு பாடவேணுமென்று சட்டமில்லையே.
தலைவன் தாலாட்டு பாடக் கூடாதென்று எந்த இலக்கியமும் சொன்னதில்லையே.
*
வா ... அருகில் வா
என் மடியில் தலை சாய்த்துப்படு
கால் நீட்டிக்கொள்
தலைப்பிடித்து விடுகிறேன்,
மெல்ல கண் வளர்,
காதினுள் கேட்கிறதா ?
*லாலி ... லாலி ... லாலி ... லாலி*


*****

153. தோகை விரித்திடும் மயிலைப் பார்த்தப் பரவசம்
கண்விழிக்கையில் குயிலின் கானம் கேட்ட பரவசம்
பறந்துத் திரியும் பஞ்சவர்ணக்கிளியைக் கொஞ்சி ரசித்தப் பரவசம்
அழைத்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தை தரும் பரவசம்
கடலலை தெறித்து ஒரு துளி கன்னத்தில் பட்டுப் பிறக்கும் பரவசம்
படைப்பைப் படித்து யாரேனும் பாராட்டும் போது வரும் பரவசம்
இவையெல்லாம் சேர்ந்தும்கூட ஈடாகா,
அன்று என்னுளெழுந்த பரவசம், உனைப்
*பார்த்த முதல் நாளில்*

*****

152. எந்த விதை விருட்சமாகுமோ
எந்த மொட்டு முதலில் பூக்குமோ
எந்தப் பாடல் மனதை ஈர்க்குமோ
எந்த மரம் எந்தப் பறவைக்கு இடம்தருமோ
எந்த நினைவு கவிதையாகுமோ
என்று நீயெனை ஏற்றுக்கொள்வாயோ
காத்திருப்பேன், அதுவரை என்நிலை
*அனல் மேலே பனித்துளி*

*****

151. விளக்கணைத்து விழிமூடி உறங்கும் வேளையில்
கண்ணடித்துக் கனவினில் காட்சி தந்தக் காதலன்
கண்ணே கற்கண்டே என்றெல்லாம் கொஞ்சி எனையெழுப்பி
வளைகரம் பற்றி விரல் வருடி கவிதை சொல்லக் கெஞ்ச
என்ன சொல்ல எப்படித் தொடங்கவெனத் தெரியாது
முத்தைத்தரு என்று முதலடி தந்த முருகனைத் துதிக்க
அவ்வமயம் *காற்றில் ஓர்வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*

*****

150. நீ ...
நான் காதல் விதைத்த நிலம்
எனக்கு நிழல் தந்த ஆலம்
கவிதைகள் அறுவடை செய்யும் வயல்வெளி
கல் எனைச் சிலையாக்கிய உளி
என் சிற்றறிவு வளர்த்த வாசகசாலை
கனவுகளின் தொழிற்சாலை
கண்மூட மனக்கண்ணில் விரியும் காட்சி
உறக்கத்தின் பின் பிறக்கும் புத்துணர்ச்சி
தியானத்தின் அமைதி
பொறுமையின் வெகுமதி
தேடாது கிடைத்தப் புதையல் 
ஓடாதுப் பெற்றப் பதக்கம்
மண்ணில் மலர்ந்தத் தாமரை
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

*****