Sunday, April 1, 2018

பொன்மாலைப் பொழுதில் 16


இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும்
ஈகை செய்வதில் முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ... கன்னத்தில் குழி விழ ...
ஒரு  சிறு புன்னகை
ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு
வான் விட்டு என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம்
இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன்
என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

பார்த்து ரசிக்க ஆளில்லையெனினும்
நீரில் தவழும் நிலவின் பிம்பம்

பறித்து நுகர ஆளில்லையெனினும்
மலர்ந்து மணம் வீசும் மலர்

கூட விளையாட ஆளில்லையெனினும்
தனக்குள் மகிழ்ந்து சிரிக்கும் குழந்தை

குதித்துப் பரவசப்பட ஆளில்லையெனினும்
கரைநோக்கி ஆடிவரும் அலைகள்

அருகில் நீ இல்லையெனினும்
அகலாது எனைச் சுற்றும் உன் நினைவு

கவிதை படிக்க ரசிக்க ஆளில்லையெனினும்
தினம் தினம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

***

காலை கண் திறக்கையில் கையில் காபியோடு நிற்கிறாய்
முத்தம் தர எத்தனித்தால் கெட்டவார்த்தை பலவோடு கண்டபடி திட்டுகிறான் அறை நண்பன்.

குளிக்கையில் கூடவே நனைகிறாய்
துடைத்து விட எண்ணுகையில் கதவு படபடவென்று அடிக்கப்பட திறக்கிறேன். வயிரைப் பிசைந்து கொண்டு உள்ளே ஓடுகிறான் நண்பன்.

உனக்கு ஊட்டி விட்டுக் கொண்டே உண்கிறேன் நான்
எனக்குக் கையிருக்குடா கபோதி என்கிறான் நண்பன்

இரவில் இருளில் ஏகாந்தமாய் நாமிருக்க
தொந்தரவு தாங்காது தரையில் படுக்கப் பழகிக்கொண்டான் நண்பன்

சரி விழி திறந்திருப்பதால் உன் உருவம் மட்டும் தெரிகிறதோ என் கண்ணே என்றெண்ணி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே

***

 என்னுள் ஒரு ஆனந்தம்
எனக்கேப் புரியாது எங்கிருந்து வந்தாய் ?

வார்த்தைகள் வரிசையில் தானே வந்தமருது
கவிதையின் உட்பொருளாய் நீ இருக்காய்.

அழகாய் உடுத்த ஆசையாய் இருக்கே
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்

திடீரென்று பூத்து மணக்கும் மல்லிகை
எதற்காக இதுவரை நீ காத்திருந்தாய் ?

எனைத்தேடி வந்திருக்கும் தேவதையே,
இதுநாள் வரை ஏனடி மறைந்திருந்தாய் ?

என்மேல் விழுந்த மழைத்துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

***


Saturday, March 10, 2018

பொன்மாலைப் பொழுதில் 15

இரவினில் உறங்கையில்
   உதடுகளுன் பெயர் உளருதே
விடிகாலைக் கனவினில்
   நிலவாயுன் முகம் தோன்றுதே
எனைத்தேடும் விழிகளில்
   மறையாக் காதல் தெரியுதே
மௌனமாய்ப் பார்க்கையில்
   மனதினில் தெளிவு மலருதே
மலைக்கோவில் வாசலில்
   கார்த்திகை தீபம் மின்னுதே

***

பார்த்து ரசிக்க ஆளில்லையெனினும்
நீரில் தவழும் நிலவின் பிம்பம்

பறித்து நுகர ஆளில்லையெனினும்
மலர்ந்து மணம் வீசும் மலர்

கூட விளையாட ஆளில்லையெனினும்
தனக்குள் மகிழ்ந்து சிரிக்கும் குழந்தை

குதித்துப் பரவசப்பட ஆளில்லையெனினும்
கரைநோக்கி ஆடிவரும் அலைகள்

அருகில் நீ இல்லையெனினும்
அகலாது எனைச் சுற்றும் உன் நினைவு

கவிதை படிக்க ரசிக்க ஆளில்லையெனினும்
தினம் தினம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

***

காலை கண் திறக்கையில்
கையில் காபியோடு நிற்கிறாய்
முத்தம் தர எத்தனித்தால் கெட்டவார்த்தை பலவோடு
கண்டபடி திட்டுகிறான் அறை நண்பன்.

குளிக்கையில் கூடவே நனைகிறாய்
துடைத்து விட எண்ணுகையில் கதவு படபடவென்று அடிக்கப்பட திறக்கிறேன்,
வயிரைப் பிசைந்து கொண்டு உள்ளே ஓடுகிறான் நண்பன்.

உனக்கு ஊட்டி விட்டுக் கொண்டே உண்கிறேன் நான்
எனக்குக் கையிருக்குடா கபோதி என்கிறான் நண்பன்

இரவில் இருளில் ஏகாந்தமாய் நாமிருக்க
தொந்தரவு தாங்காது தரையில் படுக்கப் பழகிக்கொண்டான் நண்பன்

சரி விழி திறந்திருப்பதால் உன் உருவம் மட்டும் தெரிகிறதோ என் கண்ணே என்றெண்ணி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே

***

என்னுள் ஒரு ஆனந்தம்
எனக்கேப் புரியாது எங்கிருந்து வந்தாய் ?

வார்த்தைகள் வரிசையில் தானே வந்தமருது
கவிதையின் உட்பொருளாய் நீ இருக்காய்.

அழகாய் உடுத்த ஆசையாய் இருக்கே
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்

திடீரென்று பூத்து மணக்கும் மல்லிகை
எதற்காக இதுவரை நீ காத்திருந்தாய் ?

எனைத்தேடி வந்திருக்கும் தேவதையே,
இதுநாள் வரை ஏனடி மறைந்திருந்தாய் ?

என்மேல் விழுந்த மழைத்துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?


***

Wednesday, February 28, 2018

பொன்மாலைப் பொழுதில் 14

இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும் ஈகை செய்வதில்
முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ...
கன்னத்தில் குழி விழ ... ஒரு  சிறு புன்னகை

ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு வான் விட்டு
என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம் இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன் என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

Wednesday, February 21, 2018

கலாட்டா கல்யாணம் 4



சசி தன் வீட்டில்

'ஜோசியரே ... நான் சசி பேசுறே ... '

'சொல்லுங்க தம்பி, செங்கல்பட்டு வந்திருக்கீங்களா ? '

'பொண்ணு பாத்துட்டீங்கன்னா வரேன் ... ரெடியா?'

'எங்க தம்பி பொண்ணே கெடைக்கமாட்டேங்குது'

'எனக்குத் தெரிஞ்சவங்க ... அவங்க பொண்ணு இருக்கு ... அப்பாம்மாட்ட அழைச்சுக்கிட்டு போய் காமிங்க … ஒங்க கமிஷன் பத்தியும் நான் சொல்லிட்டேன்'

'ஹிஹிஹி'

'நாளைக்கு இல்லே நாளை மறுநாள் உங்களைப் பார்க்க வர்றாங்க, வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போங்க, சரியா?'

'காதலா தம்பி ? என்னோட அட்ரஸ் குடுத்துருங்க ... நான் ஒங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி பேசி முடிச்சுடறேன்'

'பேசு முடிக்கறதை அப்புறம் பார்ப்போம்... காட்டிட்டு மட்டும் வாங்க'

'சரீங்க தம்பி'

-------------

சசி அலுவலகத்திலிருந்து

'சுகன்'

'என்னடா ஆபிஸ்ல ஞானி சார் கிட்ட பேசிட்டியா ?'

'ஞானி இல்லேப்பா யோகி, பேசிட்டே, எனக்கு 30% நல்ல பொண்ணு ஒன்னு வேணுமே'

'30% ? பொண்ணு ? நான் இருக்கேனே போதாதா?'

'நீ 50% பா, எனக்கு 30% போதும்'

'ஒன்னும் புரியல ?'

யோகி சாரிடம் பேசியதெல்லாம் விவரித்தான் சசி.

'சசி, என்னோட ப்ரெண்ட் ஒருத்தி இருக்கா, தான்வி ன்னு பேரு, அடங்காப்பிடாரி'

'ஓகே, கொஞ்சம் கர்வம், கொஞ்சம் பணக்காரத் திமிர், ஸ்டைல், எதிர்த்து எதிர்த்து பேசனும்'

'இதெல்லா அவளோட பேசிக் க்வாலிட்டீஸ்'

'வெரிகுட்'

'நாளைக்கு அவ செங்கல்பட் போகமுடியுமா ... கேட்டுச்சொல்லு'

-------

செங்கல்பட்டு ... ஜோசியர் வீடு

'ஹலோவ் ஜோசியரே '

'யாரும்மா?'

'தான்வி ... சசி அனுப்புனாரு ... அவரு வீட்டுக்கு ... போவோமா ?'

'அப்பாம்மா வரலியாம்மா?'

'இந்தாங்க 100 ரூபா ... 5 நோட்டு ... புத்தம் புதுசு ... போலாமா?'

----------

செங்கல்பட்டு ... சசியின் வீடு

'வாங்க ஜோசியரே ... நல்லா இருக்கீங்களா ... பொண்ணு கெடச்சுதா ?' என்று ரகுராமன், சசியின் அப்பா, கேட்க

'கையோட கூட்டிட்டு வந்திருக்கே'

'எங்கே ? ஏங்க முன்னாலேயே சொல்ல மாட்டீங்களா .... கமலம்' தன் மனைவியை அழைத்துக்கொண்டே ரகுராமன் உள்ளே செல்ல,

பின்னாலேயே ஜோசியர் தொடர ...

கொஞ்சம் நேரம் கழித்து ... உள்ளே நுழைந்த தான்வி, 'ஹலோவ்' திறந்திருந்த கதவில் டொக்கினாள்.

'யாருங்கவேணும்?' என்று ரகுராமன் கேட்க

'இவங்க தான் பொண்ணு ஜானகி' என்று ஜோசியர் சொல்ல,

'தான்வி, பையன பாத்துட்டு வரனும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரு, அதா வந்தேன், சசி தானே பையன் ? இருக்கானா?'

சுருக்கென்றிருந்தது ரகுராமனுக்கு. இருந்தாலும் நம்ப காலமில்லை. 2018 லில்  இருக்கோம் என்று ஞாபகப்படுத்திக்கொண்டார்.

'உள்ளே வாம்மா, இப்படி உட்காரலாம்'  என்று ரகுராமன் சொல்லிக்  கொண்டிருக்கும்போதே தான்வி அங்கிருந்த இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ரகுராமன் ஜோசியரைப் பார்க்க, அவர் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் உள்ளிருந்து கமலம், சசியின் அன்னை வர, 'சசியை பையன் பார்க்க' என்று ரகுராமன் சொல்லிக்கொண்டே, 'தான்வி ன்னா என்னம்மா அர்த்தம்?' என்று கேட்க

'யாருக்குத் தெரியும், மாத்தலாம்னு கூட யோசிச்சே, ஆனா ப்ரெண்ட்ஸ் லா ஷார்ட்டா ஸ்வீட்டா இருக்கு ன்னு சொன்னாங்க, சரின்னு விட்டுட்டே'

'அப்பாம்மா வரலியாம்மா?' கமலம் ரகுராமனைப் பார்த்துக்கொண்டே தான்வியிடம்  கேட்க

'நான் மொதல்ல ஓகே சொல்லணும்ல, கல்யாணத்துக்கு வந்துருவாங்க, சசியைக் கூப்பிடுங்களேன் பார்த்துட்டுக் கெளம்புறேன்'

'சசி … சென்னைல இருக்கா, காஃபி கொண்டுவா' மனைவியைப் பார்த்துச் சொல்ல

'காஃபில்லா வேணா' என்று இடைமறித்து, 'ஜில்லுன்னு என்ன கெடைக்கு?' என்று தொடர்ந்தாள்.

'மோர் குடிக்குறியாம்மா?'

'மோர் ? அப்டின்னா?'

'வீட்டுல கூடமாட வேலை செய்யமாட்டியா ? இந்த மோர் குடிச்சா ...' கமலம் பேசிக்கொண்டிருக்கும்போதே தான்வி இடைபுகுந்தாள்.

'நான் வெரி சோஷியல், ப்ரெண்ட்ஸ், பார்ட்டி, காலைல ஒருத்தன் பிக்கப் பண்ணுவான், நைட்டு ஒருத்தன் ட்ராப் பண்ணுவான்'

'பேஸ் பேஸ் ... பார்ட்டி ல்லா போறேன்னா ... உனக்கு நல்ல பாட்டு பாட வருமே கரெக்ட்டா?' ரகுராமன் கேட்க

'ராம், எல்லா பார்ட்டிலேயு என்னோட குத்தாட்டம் தான் மெயின் அட்ராக்சன்'

ரகுராமன் கமலம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'சமைக்கத் தெரியுமாம்மா ஒனக்கு ?' என்று கமலம் கேட்டாள்

'வீட்ல சமைக்க ஆளிருக்கு,  ரோட்டுல ஒவ்வொரு மூலையிலும் ஹோட்டல் இருக்கு, கையில பணமிருக்கு’

'கல்யாணம் ஆனா சேர்ந்து இருப்பியா இல்லே ...' ரகுராமன் ஒரு ஐயத்துடன் கேட்க

'லுக் மிஸ்டர் … ராம், இன்னும் நான் கல்யாணம் பண்ணனுமா, வேணாமா ன்னு முடிவெடுக்கலே, சசி அதுக்குத் தகுதியானவனான்னு இன்னும் தெரியலே ... வாட்டவர் ... தனியா இருந்தா பெட்டெர்னாலும் வேலை செய்யனும், காஃபி போடணும், சமைக்கணும் இதுக்கெல்லா செலவில்லாம ஆளிருந்தா நல்லதுதானே ... என்ன சொல்றீங்க?' என்று எதிர் கேள்வி கேட்டு, தான்வி தொடர்ந்தாள் ..... 'பை த பை சசி க்கு எவ்ளோ சம்பளம் ?'

'ஒங்க தேவையோட கம்மியாத்தான் இருக்கும்'

'பாஸ்போர்ட் லா இருக்குல்ல அவன்கிட்ட?'

ரகுராமன் ஏதும் பேசாது எழுந்துகொண்டார்.

'ஓகே ராம் நான் யோசிச்சி சொல்றேன், வேணாம்னு சொல்லிட்டா டோன்ட் பீல் பேட், பை கமலம்'

கமலம் திகைக்க,
ரகுராமன் ஜோசியரைப் பார்த்து முறைக்க,
தான்வி அங்கிருந்துக் கிளம்பினாள்.

'சசிக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை ஆனால் இப்படியொரு பெண், வேண்டவே வேண்டாம்' என்ற நிலைக்கு வந்தனர் அவன் பெற்றோர்.

'ஜோசியரே … அனுப்பிட்டு வாங்க' என்று ரகுராமன் அழுத்திச் சொன்னது ஏன் என்று ஜோசியருக்கு நன்றாகவேப் புரிந்தது.

-----

தான்வி தான் செய்த கலாட்டாவை சுகன்யாவிடமும் சசியிடமும் விளக்கினாள்.

'சுகன் இன்னொரு ரெண்டு மூணு நாள் கழிச்சி ஒங்க அப்பா அம்மாவை சசியோட அப்பா அம்மாவைப் போய் பார்க்கச் சொல்லு, கண்டிப்பா ஒத்துப்பாங்க, கவலை வேண்டாம்'

'தேங்க்ஸ் தான்வி' என்று சுகன் சொல்ல

'சாரி தான்வி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்' என்று சசி சொல்ல

'சேச்ச்சே நான்தான் ஒங்க அப்பா அம்மா அந்த ஜோசியர் எல்லாரையும் கலாட்டா பண்ணிட்டே, இன் பாக்ட் நான்ஒங்க கல்யாணத்துக்கு வர முடியாது இப்போ, அவங்களுக்கு அப்புறம் நம்ப ப்ளான்லா தெரிஞ்சிடும்'

-----

மணமக்கள் திட்டமிட்டப்படி, பெற்றோர் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, திருமணத்திற்கு நிச்சயித்து, சசி சுகன்யாவின் திருமணம் மிக விரைவில், தேதி அறிவிக்கப்படும்; மறக்காமல் கலந்து கொள்ளவும்.

-சுபம்-

Monday, February 19, 2018

கலாட்டா கல்யாணம் 3


முன்கதைச் சுருக்கம்: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது எப்படி என்று சசி யோசிக்கலானான்.

x-x-x-x-x

சசியின் அலுவலகம்

அலுவலகத்தில் கூட பணிபுரியும் யோகியை சந்தித்துத் தன் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது பற்றி பேச எண்ணி அவரைத் தொலைபேசியில் அழைத்தான், சசி. பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றுமே, நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, பருத்தி ஆடை, ஆடம்பரமில்லாது அமைதியான  உருவம், அவர்தான் யோகி. தொலைபேசியில் அழைத்த கொஞ்சநேரத்தில் யோகியே சசியைத் தேடி வந்தார்.

'என்ன சசி, மிஸ்டு கால் குடுத்தீங்க?'

'அதுஒண்ணுமில்ல சார் ...'

'ஏங்க ஆபிஸ் போன்ல தானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் மிஸ்டு கால் கொடுக்கறீங்க ?'

'சார் ... மிஸ்டு கால் லா ஒண்ணுமில்ல சார் ... டக்குன்னு கட்டாயிடுச்சி'

'சரி எதுக்குக் கூப்டீங்க?'

'சார் ... நீங்க ஒரு யோகி ... பலவிதப் பிரச்சனைகளை சமாளிச்சிருப்பீங்க, நல்லவரு, வல்லவரு'

'காதல் என்ற மாய வலையில் மாட்டிக்கிட்டீங்க, கரெக்ட்டா ?'

'எப்டி சார்?'

'பின்ன உளர்றீங்களே, தண்ணி போட்டுருக்கணும், இல்லேன்னா கண்ணு மண்ணு தெரியாம காதல்ல மூழ்கியிருக்கணும்'

'தண்ணி பழக்கம் கெடையாது ன்னு ஒங்களுக்குத் தெரியும்'

'செலவு அதிகமாகுமே'

'சார் ... வாங்கித் தர்றாங்க சார் ... நான்தான் குடிக்கறதில்லை '

'சரி எதுக்குக் கூப்டீங்க ? பணம் வேணுமா ?'

'சார் ... பணம்லா இல்லே சார் ... காதல் சம்மந்தமா கொஞ்சம் ஐடியா சொல்லுங்க சார்'

'நான் யோகிங்க, வாழ்க்கைத்தத்துவம் கேட்டீங்கன்னா ஏதாவது சொல்லலாம், காதல்ல நான் என்ன ஐடியா தர முடியும்?'

'சார் ... எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கமாட்டாங்க, இருந்தாலும் காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கறது?'

'அப்பாம்மா சம்மதம் முக்கியம்ன்னு நெனச்சீங்கன்னா ... காதலுக்கு அவங்க ஒத்துக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டே ஏன் காதலிக்கறீங்க?'

'சார் ... இப்போ  கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் வாங்கறது ... அதுக்கு வழி சொல்லுங்க சார்?'

'உம்ம்ம் ... இருகோடுகள் வழி ஃபாலோ பண்ணுவோமா?'

'என்னோட வலி தீருமா ?'

'இப்போ தீரும், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அடி இருக்கும்?'

'அது எல்லாருக்கும் விழுகிறது தானே சார், எனக்கு மட்டும் ஸ்பெஷல் லா ?'

'தெரிஞ்சிக்கிட்டே குதிக்கறீங்க ?'

'ஆமா சார்'

'கையும் காலும் மூக்கும் கொண்டு ஆடவந்தக் காரணம் ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரணும் '

'நீங்க யோகி சார் … ஒண்டிக்கட்டை ... தாமரை மேல் தண்ணீர்னு வாழுறீங்க .... நம்மால முடியுதா ? அந்த இருகோடுகள் பத்திச் சொல்லுங்க சார்'

'சொல்றேன், ஒங்க வீட்டுல எப்டி ஜாதகம் பார்ப்பார்களா? '

'வெறும் மனப்பொருத்தம் தான் சார்'

'அப்புறம் என்ன, எங்க மனம் பொருந்தியிருக்குன்னு சொல்லிடுங்க'

'அவங்க பாத்து அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற பொண்ண கட்டிவைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க சார்'

'அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற ? ஒங்களுக்குக் கல்யாணம் பண்ற ஐடியா அவங்களுக்கு இல்லியோ என்னவோ?'

'சார் நான் காதலிக்கிற சுகன்யாவக் கல்யாணம் பண்ணிக்க என்ன பண்ணனும்?'

'சொல்றேன், வீட்ல எப்படி ஜோசியர் பொண்ணைக் காமிப்பாறா இல்லே கல்யாண ப்ரோக்கர் வருவாரா ?'

'ஜோசியர் ஒருத்தர் இருக்காரு சார், எனக்கு அவரைத் தெரியும்'

'குட், இப்போ இந்த சுகன்யா, ஒரு 60% நல்ல பொண்ணுன்னு வச்சிக்கலாமா ?'

'சார் ... 50% நல்ல பொண்ணு சார்'

'அவ்ளோதானா ? '

'சார் ... நீங்க தானே சார் அதிகமா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வீங்க ? '

'சரி, 50% நல்ல பொண்ணு, ஒரு 30% நல்ல பொண்ண ஜோசியர் கிட்ட ஒங்க அப்பாம்மாவுக்குக் காட்டச் சொல்லுவோம், பொண்ணை ஒங்க வீட்டுல ரகளை பண்ண சொல்லுவோம், அப்பாம்மா முடியாது ன்னு சொல்லுவாங்க, மூட் அவுட் ஆவாங்க, அடுத்து ஒங்க 50% பொண்ணு விவரத்தை கொடுத்துக் காட்ட சொல்லுவோம், வேற பொண்ணே இல்லீங்க ன்னு ஜோசியரை சொல்லச் சொல்லுவோம், கெடச்சது போதும் ன்னு நீங்க ஒத்துக்கறமாதிரி ஓத்துக்கோங்க ... ஓகே வா?'

'ஓகே மாதிரிதான் சார் இருக்கு, அந்த 30% ... ஒங்களுக்கு யாராச்சு தெரியுமா?'

'என்னைப் பாத்தா உங்களுக்கு என்ன பொம்பளை ப்ரோக்கர் மாதிரி தெரியுதா?'

'அதில்ல சார்'

'ஆரம்பத்துல நீங்க ஒரு யோகி, நல்லவரு வல்லவரு ன்னு சொன்னீங்க, வேலை முடிஞ்ச உடனே ....'

'சாரி சார், நான் பார்த்துக்கறேன், நன்றி சார்'

'வாழ்க வளமுடன்'



[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

Saturday, February 17, 2018

கலாட்டா கல்யாணம் 2


recap: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். கனவுகளோடு பலவோடு கதவு திறக்கையில் எதிர்வீட்டில் ...

x-x-x-x-x

எதிர்வீட்டுக்கு சுகன்யா குடிவருவதைப் பார்த்ததும், சசியின் மனதிற்குள் பத்து கதவுகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் திறந்து கடைசியில் சுகன்யா நின்று இவனைப் பார்த்துச் சிரித்து வெட்கிப்பது போல... அதே தாங்க ... பாரதிராஜா படத்துல ... தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் ... அந்த எபெக்ட்;

'ஹலோவ்' சசி பேசத்தொடங்கினான்.

'ஹலோ’

‘புதுசா குடிவந்திருக்கீங்களா ?'

'ஆமா இன்னிலேர்ந்து'

'ஞாபகமிருக்கா ?'

'நல்லா ஞாபகமிருக்கு, இந்த வீடுதான்'

'அட அதில்லேங்க, நேத்து ATM ல பார்த்தோமே .... சசி'

'இல்லே சுகன்யா ... சுகன் ன்னு கூப்பிடுவாங்க'

'என்னோட பேரு சசிங்க ... சுருக்கமா சசீந்திரன்னு கூப்பிடுவாங்க'

'யு மீன் .... பேரு சசீந்திரன் ... சசி ன்னு கூப்பிடுவாங்க'

'அதானே நான் சொன்னே, இல்லியா?'

'நைஸ் மீட்டிங்'

'இருங்க நான் காஃபி போட்டுக் கொண்டுவர்ரேன், ஒன் நிமிட்'

'தேங்க்ஸ் ... நான் இப்போதா குடிச்சிட்டு வந்தேன், பத்து நிமிசத்துல ஆபிசுக்குக் கெளம்பணும், அப்புறம் பார்ப்போம்'

'எங்கே போகணும்?'

'தரமணி'

'நானும் ...' சசி முடிப்பதற்குள் சுகன்யா உள்ளே சென்றிருந்தாள்;

அய்யய்யோ நெஞ்சு கெறங்குதடி
ஆகாயம் இப்போ வலையுதடி

அவன் நெஞ்சத்து எண்ணங்களை உள்வாங்கி ரேடியோ பாடத்தொடங்கியது.

---------

இப்படியாக இருவரும் ... ஒரே இடத்தில் எதிர் எதிர் வீட்டில் வசித்து ... ஒரே இடத்தில் தரமணியில் வேறு வேறு கம்பெனியில் பணி புரிந்து ... தம் தமது வண்டியில் ஒன்றாய்ச் சென்று ..... முடிந்தவரை ஒன்றாய்த் திரும்பி வந்தனர்;

அடுத்தென்ன ... காதல் தான்.

'சுகன் ... ஒருகவிதை'

'சொல்லேன்'

     'அலையாய் நான் படகாய் நீ 
     ஆடித்திரிவோமா ?
     மழையாய் நான் முகிலாய் நீ 
     கொட்டித் தீர்ப்போமா ?
     குரலாய் நான் குயிலாய் நீ 
     பாடிப் பறப்போமா ?
     உடையாய் நான் இடையாய் நீ 
     ஒட்டிக்கிடப்போமா ?
     விதையாய் நான் நிலமாய் நீ 
     செடியாய் முளைப்போமா ?
     கவியாய் நான் தமிழாய் நீ 
     கவிதை புனைவோமா ?
     கண்ணன் நான் ராதை நீ 
     காதல் செய்வோமா ?'

'லவ்லி, சசி, ஐ லவ் யு'

'ஐ டூ ... சுகன்'

'அடுத்து ?'

'கல்யாணம் பண்ணிப்போமா ?'

'இன்னும் கொஞ்சம் காதலிப்போமே சசி'

'தனித்தனியா இருக்கணும், ரெண்டு பேரும் வாடகை தரணும், வேஸ்ட் இல்லியா?'

'அடப்பாவி, அப்போ வாடகை மிச்சப்படுத்தத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா?'

'அப்டி ஏன் யோசிக்கறே நீ, இப்போ ஒரு வீடு வெக்கேட் பண்ணிட்டா வேற யாராவது வாடகைக்கு வரலாம், அப்டி வர்றவங்களுக்காக யாராச்சும் காத்திருக்கலாம் ... அவங்களும் காதலர்களா மாறலாம் … இப்டி என்னென்னவோ நடக்கலா … இல்லியா ?'

'சரி ஒங்க வீட்டுல காதலுக்கு ஒத்துப்பாங்களா?'

'ஒதப்பாங்க, சமாளிப்போ, ஒங்க வீட்டுல ?'

'பிரச்சனை இருக்காது சசி, எப்டி சமாளிக்கப்போறே ஒங்க வீட்டுல?'

'தெரிஞ்ச ஒரு சார், யோகி இருக்காரு ஆபிஸ்ல, அவர்ட்ட ஐடியா கேக்குறே, ஏதாச்சும் சொல்லுவாரு'

'ஓகே, பேசிட்டுச் சொல்லு, போலாமா ? ஓலா புக் பண்ணே ?'

'நடந்துப் போவோமே, ஈவினிங் வாக் ஈஸ் குட் பார் ஹெல்த்'

'டேய், நான் பணம் தரேன், வாப்பா'

'ஆட்டோ ரெடியா இருக்கே, போலாமா? '

'டின்னர் வாங்கித்தறியா? ஆட்டோல போகலாம்'

'இதோ ஓலா புக் பண்றே'

'நாயி, கல்யாணம் ஆகட்டும், ஒன்னைப் பாத்துக்குறேன்'

'ஹிஹிஹி'

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

Thursday, February 15, 2018

கலாட்டா கல்யாணம் 1




இதோ நமக்கு எதிர்த்தாப்புல கருப்புக் கண்ணாடியோட கொஞ்சமா மீசை, தாடி ட்ரிம் பண்ணிக்கிட்டு, கருப்பு தான், இருந்தாலும் களையா இருக்குறமாதிரி நெனச்சுக்கிட்டு, ஸ்டைலா நிக்குறாரே ...

இவருதாங்க சசி, என்ற சசீந்திரன். பெரிய பண்ணை ... பல தலைமுறைக்கு முன்னால. இப்போ ஒன்னும் இல்லே. அட்லீஸ்ட்  அப்படித்தான் அவரு வெளியில சொல்லிக்கிட்டுத் திரியறாரு. நல்ல பையன். காசுல கெட்டி. 5 பைசா வீணா செலவு பண்ண மாட்டாரு. கெட்ட சகவாசமெல்லாம் கெடையாது. அதான் பணம் செலவு பண்ணமாட்டாருன்னு சொல்லிட்டேனே, அப்புறம் எப்படி இருக்கும் கெட்ட சகவாசம்.  MCA படிச்சிமுடிச்சிட்டு ஏதோ கம்ப்யுட்டர் கம்பெனில என்னவோ வேலை பாத்துகிட்டு, பணம் சேத்து வச்சி, வேறெதுக்கு ... கல்யாணம் கட்டிக்கத்தான், அதுவரைக்கும் காதலிக்க ஆள் தேடுற வேலையும் சைடுல பார்க்கறாரு.

ஒருநாள் ... நம்ப சசி ஆபிஸ்லேர்ந்து கிளம்பி, வீட்டுக்கு வர்ற வழியில, பணம் எடுக்கலாம்னு ஒரு ATM சென்டருள் நுழைய, கதவு ஆட்டோமாட்டிக்கா மூடத்தொடங்க, கதவு மூடுவதைக் கவனிக்காது போன் பேசியபடியே பின்னாலேயே நுழைந்தாள் சுகன், என்ற சுகன்யா. மயிரிழையில் மூடும் கதவைப் பிடித்து நிறுத்தி அவள் உள்ளே நுழைய வாகாய்த் திறந்துவைத்தான் சசி.

'தேங்க்ஸ்' என்றவள் சொல்ல, சின்ன சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டான்.

இருவரும் தங்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தம்தமது வழியே சென்றனர்.

---

வண்டியில் செல்லும் போதெல்லாம் அந்த 'தேங்க்ஸ்' ஒலி மட்டும் சசியின் காதினுள் ஒலித்தப்படியே இருந்தது. கனவுலகத்தில் மேகங்களுக்கிடையில் அருகில் அந்தப்பதுமை அமர்ந்திருக்க தேர்மேல் பவனி வந்துகொண்டிருந்த நம் சசியை 'சாவுகிராக்கி எப்டிப் போவுது பாரு?' என்று ரோட்டில் ஒருவர் திட்டிய சொல் மண்ணுலகிற்கு இழுத்து வந்தது. அவருக்குத் 'தேங்க்ஸ்' சொல்லி விட்டுத் தன் பாதையில் தொடர்ந்தான். சிக்னலில் வண்டியை நிறுத்த பக்கத்தில் பார்த்தால் .... சுகன்யாவும்  சிக்னல் ல பக்கத்துல வண்டிய நிறுத்துனா ன்னு நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தீங்கன்னா தப்புங்க; ஏன்னா பக்கத்துல யாருமில்ல. நம்ப சசியோட மனசுல 'அவளும் இப்போ இங்கே இருந்தா நல்லா இருந்திருக்கும்ல' அப்டின்னு ஒரு நெனப்பு, 'அவ பின்னாலேயே போயிருக்கலாமோ' என்ற எண்ணம்.

சசி இதற்கு முன்னால், காதலென்று அவற்றைச் சொல்லமுடியாதென்றாலும், சில பல பெண்களோடு பழகியிருக்கிறான். கல்லூரி வாழ்க்கையின் போது பஸ்ஸில் கூடவே பயணித்த பவானி, பக்கத்து வீட்டு ஹேமா, என்று பலரோடு பேசியிருக்கிறேன். இருந்தாலும் மின்னல் வேகத்தில் ATM மிலும் தன் நெஞ்சிலும் நுழைந்து மறைந்துவிட்டவளை, பணத்தையும் இதயத்தையும் ஒருசேர எடுத்துச் சென்றவேளை இனி எங்கே எப்போது காண்பேனோ என்று எண்ணியபடியே தன் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான். ஒருநாளைக்கு எவ்வளவு மனிதர்களைப் பார்க்கிறோம். இப்படியா எல்லாரையும் நெனச்சி ஏங்குறோம் ? இதுதாங்க ‘எதுஎது எப்பப்போ நடக்கணுமோ அதுஅது அப்பப்போ நடக்கும்’னு சொல்லுவாங்க. கண்ணைத் திறந்து கொண்டே கனவு பல கண்டபடியே காலை விடியும்வரை கண் திறந்திருந்தப்படியே கட்டிலில் கிடந்தான், நம் கதையின் நாயகன்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. 'அவளாயிருக்குமோ, ஆனா அவளுக்கு வீடு எப்படி தெரியும், ஒருவேளை இந்த ஆண்டவன் ... ஆண்டவன் ... ன்னு சொல்றாய்ங்களே .... அவரு ஏதாச்சு மாஜிக் பண்ணி ... ' இப்படியே சசி அவளைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கையில் கதவு மீண்டும் பலமாய்த் தட்டப்பட, திறந்து யாரென்று பார்த்தான்.

'பால் பாக்கி 1200/-, தர்றீங்களா? காலை நேரம், நாலு எடத்துக்குப் போகணும், கொஞ்சம் சீக்கிரம்' பால்காரர் படபடவென்று பேசியபடியே நிற்க, நேற்று இரவு எடுத்தப்பணத்தில் அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் எண்ணிக்  கொண்டிருக்கையில், பூட்டியிருந்த எதிர் வீட்டு வாசலில் ... தொடைச்சி ... கோலம் போட்டு, சுப்ரபாதம் பாட்டு பாடிக்கிட்டே ... ன்னு நா சொல்லுவேன்னு எதிர்ப்பாத்தீங்கன்னா ... நீங்க நினைக்கிறது தப்பு; இப்போல்லாம் யாருங்க கோலம் போடுறாங்க, சுப்ரபாதம் கேட்குறாங்க; எதிர்த்த வீட்டு வாசல்ல பால் பாக்கெட் மட்டும் கெடக்குது. 'யாரு வந்திருக்காங்களா?' என்று கேட்டபடியே பணம் கொடுத்தான். 'தெரிலீங்க, இன்னிலேர்ந்து பால் போடச் சொன்னாங்க, போட்டேன், வரேங்க' என்று சொல்லிவிட்டுப் பால்காரர் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஓலா வந்து நிற்க அதிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ் இறக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டது, 'தேங்க்ஸ் ண்ணா ' என்று சொல்லிக்கொண்டே அவள் வீட்டைத் திறக்க .... 'தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்' அந்த ஒரு வார்த்தை மட்டும் சசியின் மூளையுள் நுழைந்து எல்லா நரம்புகளிலும் மோதி அவனைக் கதவை நோக்கித் தள்ளியது.  படாரென்று தன் வீட்டு கதவைத் திறந்து யாரென்று பார்த்தால் ....

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]