தூளியில் தூங்கிக் கிடந்தது ஒருகாலம்
துக்கமேதுமின்றி துள்ளித் திருந்தது ஒருகாலம்
தூண்மறைவில் மறைந்து நின்று பேசியது ஒருகாலம்
தூரத்தில் நின்று ஏக்கத்தோடு பார்த்தது ஒருகாலம்
தூற்றுவாரையெல்லாம் துச்சமாய் மதித்து
தன் வழி சென்றது ஒருகாலம்,
சிவனையெண்ணி
சிவோஹம் எனச்சொல்லி
சிவபதம் கிட்ட
சிந்தித்திருப்பது இக்காலம்;