Friday, June 7, 2013

லிங்காஷ்டகம்

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

     
      முனிவர்களால்
முக்காலமும் பூஜிக்கப்படுபவனே,
காமனை எரித்தவனே - ராவணனின்
கர்வம் அழித்தவனே,
துன்பம் நேர்கையிலெல்லாம்
துணை நின்று
துயர் துடைப்பவனே,
தூயவனே உன்னை வணங்குகிறேன்.

வாசம் மிக்க மலர்களால்
நேசம் கொண்டு அர்ச்சிக்கப்படுவோனே,
நாடி வந்தோரின்
வாழ்வு கூட வைப்போனே,
சித்தர்களும் அசுரர்களும்
சிரம் தாழ்த்தி வணங்கப்படுவோனே,
சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

     
      உயர்ந்த பல ஆபரணங்களால்
அலங்கரிக்கப் படினும்,
நாகங்களை நகையாய்
அணிந்திருப்போனே,
தக்ஷனின் யாகம் அழித்தோனே,
தயாளனே உன்னை வணங்குகிறேன்.

சந்தனம் தடவி,
குங்குமம் இட்டு,
தாமரை மலர்களால் மாலை சூட்டி,
எங்கள் பாவங்களைப் போக்கும்
பார்வதி மணாளா,
உன்னை வணங்குகிறேன்.

     
      தேவர்கள்
வாழ்த்தி வணங்கி வழிபட
வரம் பல தரும் விமலா,
ஆயிரம் ஆயிரம்
ஆதவனுக்கு நிகராய்
பேரொளி வீசி
பிரகாசிக்கும் பரமா,
உன்னை வணங்குகிறேன்.

எட்டு மலரிதழ் இடையே அமர்ந்து,
நல்லது நிலைக்கவும்
தீயது அழியவும்
அருள் புரியும் பிரணவா
உன்னை வணங்குகிறேன்.

     
      உன் அடிபணிந்து தேவர்களின் ஆசான் நிற்க
உனை மலர் தூவி மற்றெல்லோரும் அர்ச்சிக்க
உயர்ந்தவனும்,
வலியவனுமான
வரதா
உன்னை வணங்குகிறேன்.

Friday, May 31, 2013

திருவாசகம் - ஆனந்த மாலை

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிந்தவர் இன்னொரு
பிறவி இல்லாத
பாக்கியம் பெற்றனர்.

பூவால் உனை அர்ச்சித்தோர்
பூலோகம் நீங்கி
தேவலோகத்தில்
தேவர்களோடு தேவர்களாயினர்.

கல் நெஞ்சன் நான்,
செய்ததெல்லாம் பாவம் தான் - உமையோனே
உன் துணை கிட்டினால்
போகும் என் துயரம் தான்.

அரிதர்க்கரிய பிறவி தந்தாய்.
அறியாமல் கெட்டேன் நான், இறைவா .
அடியார் எவரோடும் சேராமல்
ஆளானேன் கொடிய நோய்க் இரையாய்.

ஒழுக்கம் இல்லாமல்
விருப்பம் போல் ஆடிக்கிடந்தேன்.
அன்போடெனைக் காக்கும் எம்பெருமானே,
உன்னடி நான் சேர்வது எந்நாளோ ?

தாயாய் இருந்து எனை வளர்த்தவனே
நாயாய் உன் காலடியில்
நான் கிடக்கேன்,
அடிமையாய் எனைக் கருதாது - உன்
அடியவன் ஆக்கி
அருள்தருவாய், ஐயனே.

கெட்டவன் நான் - நீயும்
கை விட்டால் காப்பது யார் ?
அஞ்சேல் என்றாறுதல்
சொல்வார் யார் ?
எனைக் காப்பதுன் கடமையன்றோ.
காக்க நீ வரணும் இன்றே.

நரியைப் பரியாக்கி
நாடகம்  நடத்திய
நாயகனே, நல்லொளியே,
நான் செய்வதறியாது  திகைக்கிறேன்
நல்வழிப்படுத்திக் காப்பாற்று
நீ.

Saturday, May 11, 2013

திருப்பட்டூர்

தேதி: 6-May -2013


ஸ்தலப் பாடல்

ஆரூர் மூலட்டானம் ஆனை காவும்
   ஆக்கூரில் தான்தோன்றி மாடமாவூர்
பேரூர் பிரம்மபுரம் பேராவூரும்
   பெருந்துறை காம்பிலி திருபீடவூர் பேணும்
 கூரார் குறுக்கை வீரட்டானமும்
   கோட்டூர் குடமுக்கு சோழம்மும்
காரார் கழுக்குன்றும் காணப்பேரும்
   கயிலாய நாதனையே காணலாமே

                                                  - அப்பர்


Seen in the foto below, My kid & my brother's kid.


The beautiful entrance to the Shiva temple.


Another foto of the temple entrance.


This is the Shiva temple at Thiruppattur. There's a Brahma temple which is famous @ Thirupattur. The Ishwar at this temple is called Brahmapureeswar.

Thursday, March 7, 2013

Happy International women's day


................
ஆமா புஷ் ன்னா புல் லுவோ
புல் லுனா புஷ் சுவோ
................
சாவி  போடாம வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோ
நீங்க டெக்னாலஜி யா இம்ப்ருவ் பண்ணணு சார்
................
அவசரம் டிவி ஆன் பண்ணாம ரிமோட் வொர்க் பண்ணலேன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவோ
நீங்க  டிவி ஆன் பண்ணிட்டு போங்கப்பா
................
எங்களுக்கு புடிச்ச ட்ரெஸ் போட்டுக்கக் கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லியா,
பின்ன காந்தி எதுக்கு பாதி ஆடை உடுத்திப் பாடுபடனு, சொல்லுங்க
................
தேவைன்னு வாங்குவோ, தேவையில்லாம போகும், என்ன பண்றது ?
ஒங்கள நாங்க தள்ளியா வெச்சிட்டோ ?
................
பேச வைக்கறீங்க சார் பேச வைக்கறீங்க
எங்க உரிமைய நிலை நாட்ட நாங்க கத்த வேண்டியதிருக்கு,
கதற வேண்டியதிருக்கு, கண்ணீர் விட்டு அழ வேண்டியதிருக்கு ....
OK OK madam, Happy International women's day
Thank you;

Wednesday, March 6, 2013

காத்திருக்கே, தனிமையில கெடக்கே





திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனிய
இதுவரைக்கு வரலே ஏன்னு தெரியலே,
நாளைக்கு வரலா இல்லே அடுத்த வாரம் வராலான்னு - இன்னு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.

தபால்காரரு வாராரு போறாரு
தகவல் ஏது சொல்லாம தப்பிக்கராரு
மணியக்காரரு தவறாம நலம் விசாரிக்கராரு
அடிக்கடி பட்டணம் போறாரு
ஆனா ஒன்னப்பத்தி மட்டு பேச மாட்டேங்கறாரு.

கோவில் பூசாரி -
நெலத்த கோவிலுக்குக் குடு ஒ
நெலம மாறு
கவல தீரும்னு சொன்னாரு,
எனக்கு ஒன்னு தெரிலே - அவரு
பொண்ணுக்கு கண்ணாலம் ஆச்சி அசலூருல.

ஆத்துல தண்ணி இல்லே என்
அழுகை ஓயலே;
வாழ்க்கைல நீஞ்சுரே நீஞ்சுரே
கரை எங்கே தெரியலே;
காதலிச்ச ஒனக்கு என்னை
கட்டி வாழத் தெரியலே
பூத்து நின்ன எனக்கு
காதல்னா என்னன்னு புரியலே.

கூட இருந்த கிளி,
ஜோடி ஒன்னு சேத்துக்கிச்சி,
தனியா இருக்கு என்னைப் பாத்து
சவுக்கியமான்னு கேட்டு சிருச்சிகிச்சி;
என் வேதனை அதுக்குப் புரியலே,
நீ தரும் சோதனை எனக்குப் புரியலே;

சட்டுபுட்டுன்னு வந்தா
சடங்கான பொண்ணு
சம்சாரமாவா, இல்லே
சங்கருத்துக்கிட்டு
சாமியாவா, நல்ல
சேதி சொல்லு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.


Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள்


திடீர்னு  வெயில் மழை
பயங்கரமாப் புயல் காற்று
குளிரும் நெருப்பு
காது கிழிய மெல்லிசை
கண்ணுக்கு அழகாய் நீ
சம்பந்தமில்லாக் கவிதை
இந்த வாழ்த்து போல -
   காதலர் தின வாழ்த்துக்கள்

Thursday, February 7, 2013

இரயில் பயணம்




'பாத்துப் போடா, போய் சேந்த உடனே போன் பண்ணு '
'இட்லி காலைலேயே சாப்ட்ருங்க, சக்கரை தனியா டப்பால இருக்கு '
'மச்சி நெனச்சது முடிஞ்சதா ?'
'அம்மாவ கேட்டதா சொல்லு  '
'காய் கலோவ் கயு, மறந்துறாதே '
'அப்பா டாட்டா '
'குட்டி போய்டு வரவா'
'பாத்து போடி, வாடகை ஞாபகமிருக்கட்டு '

ம்
எத்தனை உறவுகள்
எத்தனை மனிதர்கள்
எத்தனை எதிர்பார்ப்பு

வழியனுப்ப ஆளில்லாது
வரவேற்கவும் யாருமில்லாது,
தனியே தன்னந்தனியே
நான் மட்டும்.

இரயில் பயணங்கள் பல
சிந்தனை என்றும் ஒன்றே.