Friday, January 17, 2020

கம்பராமாயணம் 11


வேள்விப் படலம்

422.   எண்ணுதற்கு ஆக்க அரிது
                  இரண்டு மூன்று நாள்
          விண்ணவர்க்கு ஆக்கிய
                  முனிவன் வேள்வியை
           மண்ணினைக் காக்கின்ற
                  மன்னன் மைந்தர்கள்
           கண்ணிணைக் காக்கின்ற 
                  இமையின் காத்தனர்.

முனிவர், தேவர்களின் பொருட்டு செய்த வேள்வியை
மண்ணைக் காக்கும் மன்னவன் மைந்தர்கள்,
அரிய கடினமான ஆறு நாள் காவல் பணியை
கண் விழியைக் காக்கும் இமை போல செய்து முடித்தனர்.


436.  எய்தனர், எறிந்தனர், எரியும் நீருமாய்ப்
         பெய்தனர், பெரு வரை பிடுங்கி வீசினர்,
         வைதனர், தெழித்தனர், மழுக் கொண்டு ஓச்சினார்,
         செய்தனர், ஒன்று அல  தீய மாயமே.

(வேள்வியைத் தடுக்கும் நோக்கில்)
அரக்கர்கள் அம்பு எய்தினர்,
சூலம் வேல் முதலியவற்றை எறிந்தனர்
நெருப்பையும் தண்ணீரையும் பொலியச் செய்தனர்.
;பெரிய மலைகளை பிடுங்கி வீசினர்
அதட்டினார், மழு எறிந்தனர்
இன்னும் பல மாய வேலை செய்தனர்.


443.  கவித்தனன் கரதலம், 'கலங்கலீர்' என
         செவித்தலம் நிறுத்தினன்;சிலையின் தெய்வ நாண்
         புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
         குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.

கலக்கம் வேண்டாம் என்று கைகளைக் கவித்து
தன் தெய்வீக அம்பை காது வரை இழுத்து
அந்த இடத்தை ரத்தக் காடாக்கினான்
குன்று போல் அரக்கர்களின் தலையைக் கொய்தான்.



451. அரிய யான் சொலின், ஐய! நிற்கு
             அறியது ஒன்று இல்லை;
         பெரிய காரியம் உள; அவை
              முடிப்பது பின்னர்;
         விரியும் வார் புனல் மருதம் சூழ்
              மிதிலையர் கோமான்
          புரியும் வேள்வியும், காண்டும் நாம்,
              எழுக!' என்று போனார்.

'பெருந்தகையே, கடினமான செயல் எதுவும்
உனக்கு கடினமாகாது.
காலம் கனியட்டும், இன்னும் சில
பெரிய செயல்கள் முடிக்க நேரம் வரட்டும்.
மருத நிலங்கள் மிகுந்த
மிதிலை நாட்டு மன்னன்
யாகம் ஒன்று செய்கின்றான்,
கண்டு களிப்போம் வாரும்'
என்று சொல்ல, மூவரும் கிளம்பினார்.

( தொடரும் )


No comments:

Post a Comment