Tuesday, June 19, 2012

அரிச்சந்திரன் - 3

                                    அரிச்சந்திரன் சந்திரமதி

சக்கரவர்த்தி அரிச்சந்திரன் தன் மனைவி
சந்திரமதியுடன், கூடவே
சாந்தமே உருவான புத்திரனுடன்
சயனித்திருக்கிறான்.
விடிகாலைப் பொழுது;
விடிய இன்னும் நேரம் இருக்குப் பொழுது
அரிச்சந்திரன் ஒரு கனவு கண்டான்.
அதிர்ச்சியில் விழித்துக்கொண்டான்;
இருள் போக்கும் வெள்ளி
தன் கவலை தீர வழி காட்டும்
என எண்ணிக் காத்துக் கிடந்தான்;
கனவின் காரணம் தேடிக் கிடந்தான்;
முகம் வாடிக் கிடந்தான்;

அவ்வமயம்
அரிச்சந்திரன்
அன்பு மனைவியும் கனவொன்று காண,
அடுத்தகணமே அஞ்சி
அலறினாள்;
கணவன் தேற்றினான்;
கண்ட கனவு யாது என்று வினவினான்;

"காவலா, தங்களைக்
கருப்பு நிறப் பாம்பு ஒன்று
சுற்றிக் கொள்கிறது,
சிம்மாசனத்திலிருந்து உங்களை அது
கீழே தள்ளுகிறது;
தப்பிக்க முடியாது
தவிக்கிறீர்கள் நீங்கள்;
பின் ஒருவாறு அந்தப்
பாம்பைக் கொன்று
எழுந்து வருகிறீர்கள்;
என்ன ஒரு கொடுமையானக் கனவு"

நடுநடுங்கியே
நவின்றாள் தலைவி;
நல்லதே நடக்கும், நம்பி இரு என்று
ஆசுவாசப்படுத்தினான்
நாடாளும் தலைவன்;

மேலும் தொடர்ந்து பேசினான்;
‘கண்மணி
கலங்காதே,
அந்த ஈஸ்வரன் கிருபையால்
நமக்கு ஒரு ஆபத்தும் நேராதே;
அவனின்றி ஒரு அணுவும் அசையாதே;

நானும் கண்டேன் ஒரு சொப்பனம்;
அதைக் கண்டது முதல் காணவில்லை சயனம்;
நமைக் காக்கும் சிவம்;
அவனே இதற்கு நிவாரணம்';

தாங்கள் கண்ட கனவு யாதென்று
வினவினாள் தமயந்தி;
விளக்கினான் அவள் தலைவன்;

தமயந்தி,
என் கனவில்
உன்னைத் தவிர இரண்டு மனைவியர் எனக்கு;
அவர்களில் ஒருவரை
அரக்கன் ஒருவன்
அபகரிக்கிறான்;
அதையும் தொடர்ந்து
அன்பே நீ என்னை விட்டு பிரிய நேர்கிறது;
இன்னொருத்தி பிரியாது என்
இணையாய் இருக்கிறாள்;
இவ்வளவு இக்கட்டுக்குப் பின்
பிரிந்த இருவரையும் ஒருவாறு
மீண்டும் இணைய முடிகிறது;

சொல்லி முடித்தான் அயோத்தி அரசன்;
சொல்ல முடியாத் துயரம் கொண்டாள் அரசி;
அரசனை விட்டு
அணுவளவும் இதுவரை பிரியாத கற்புக்கரசி;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment